Saturday 30 October 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-15


நாம் பலங்கொடு கழித்தலும்

குறைப்புல்லும் நக்கி

மேம்படும் தொழிற்கு உதவலால்

பிறவற்றில் மிகுவித்து

ஓம்பும் நல்விலை அடையலன்

எனில் உழவில் கண்

ஆம் பெரும் செலவால் அடை

அரும் பயன் என்னாம்

நாம் விளை பொருள்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு கழித்தவைகளான தட்டை, உமி, சக்கை, தவிடு ஆகியவற்றை உண்டு, குறைவில் உள்ள புல்லையும் மேய்ந்து ஆவினங்கள் நமது தொழிலுக்குப் பெரிதும் உதவுகின்றன. அப்பொருட்களால் பசுவினக்களைக் காப்பாற்றி நல்ல விலைப் பொருளை அடையாதவன், உழவுத் தொழிலால் உண்டாகும் பெரும் கூலிச் செலவுகள் போக விளை பொருள்களால் என்ன பயன் அடைவன். அவை கட்டுபடியாகா. எனவே பசுவினங்களை காப்பாற்றி விற்பனை செய்யும் பொருளே நல்ல பயன் தரும்.

No comments:

Post a Comment