Monday 27 July 2009

விழித்துக் கொள்ளாவிட்டால் அழிவு நிச்சயம்!



விழித்துக் கொள்ளாவிட்டால் அழிவு நிச்சயம்!
First Published : 27 May 2009 12:56:00 AM IST


தரைமேல் காணப்படுகிற அமேசான் காடுகளின் அடர்த்தியைப்பற்றி நாம் அறிவோம். கடலிலும் அப்படி ஓர் அடர்த்திமிக்க பவளப்பாறைத் தொடர்கள் தென்கிழக்கு ஆசிய கடல் எல்லைகளில் உள்ளன. இந்தக் கடல் பிரதேசத்தில்தான் குரோஷி என்கிற வெப்ப நீரோட்டமும் உள்ளது.


நிலப்பரப்பு உயிரினங்கள் தாங்கள் உணவைத்தேடிக் கண்டறிந்து தற்காப்புக்குத் தகுந்த சூழல்களில் வாழத் தலைப்படுவது இயல்பு. அதைப் போலவே கடல்வாழ் உயிரினங்கள் கடல்நீருக்கடியில் செழித்திருக்கும் பவளப்பாறைகளை அண்டி வாழ்வதும் இயல்பு. இந்தியக் கடலிலிருந்து பசிபிக் கடல் வழியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஒட்டிச் செல்லும் குரோஷி நீரோட்டப்பாதை இதற்குப் பெரிதும் துணைபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
பூமி வெப்பமடைவது நாளுக்குநாள் அதிகரிக்கிறது. இதை ஒரு கட்டுக்குள் வைத்திருந்தாலன்றி, பூவுலக உயிரினங்கள் அனைத்துக்கும் தீங்குகள் பல விளையும். இதைக் கருத்தில் கொண்டு 1990-ம் ஆண்டில் எந்த அளவு கரியமிலவாயு வெளியாகியதோ அதில் 80 சதவீதத்துக்குக்கீழ் உள்ளதாக இருக்குமாறு தற்காத்து வருவது அவசியம் என்றும் அதை அனைத்து நாடுகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் ஜப்பான் கியோட்டாவில் நடைபெற்ற உலக நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரகடனமானதோடு சரி. எந்த நாடும் அதை நடைமுறைப்படுத்தவில்லை.
ஆனால் அண்மையில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, கியோட்டா பிரகடனத்தை எண்ணிப்பார்க்க வைத்தது.நடக்கக்கூடிய தூரத்துக்கு நடப்பது, முடிந்தவரை மோட்டார்பைக்குகள், கார் இவற்றுக்குப் பதிலாக சைக்கிள்களைப் பயன்படுத்துவது, தனித்தனி என்பதைத் தவிர்த்து பலபேர் சேர்ந்து பயணம் செய்யத்தக்க பெரிய வாகனங்களைப் பயன்படுத்துவதுமான நடத்தைகளை ஐரோப்பிய நாடுகள் பல பின்பற்றத் தொடங்கின.
சீனாவின் ஷாங்காய் மாகாண ரயில் நிலையங்களில் சைக்கிள்களை நூற்றுக்கணக்கில் நிறுத்திவைத்து ரயில் பயணிகள் வீடுகளுக்குச் சென்று திரும்ப அவற்றைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது.அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார் கார் உள்பட உலகின் பஸ், கார் உற்பத்தி நிறுவனங்கள் முடங்கிப்போயின.

அரசாங்கங்களும் விழிப்படைந்தன. கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மக்களிடையே தற்போது செய்து வருகின்றன.
குறிப்பாக பூமிக்குள் படிந்திருக்கும் பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை வரம்புமீறி தொடர்ந்து எரிப்பதால் வெளியாகும் கரியமிலவாயு இயல்புக்கு மாறானதான வெப்பத்தை அதிகரிக்கத் தூண்டுதலாக அமைந்துவிடுகிறது.அது நீடிக்குமேயானால், மேலே சொல்லப்பட்டிருக்கும் கடலுக்கடியில் மிளிர்கின்ற அமேசான் காடுகளைப் போன்ற பவளப்பாறைத் தொடர்களின் வளமை அழியும். 21-ம் நூற்றாண்டின் கடைசியில் பூமியில் வாழும் உயிர்களுக்கு வரக்கூடிய உணவுப் பஞ்சமும் தவிர்க்க முடியாததாகிவிடும் என்று பவளப்பாறை வளம் குறித்த ஆய்வுக்குழுவின் தலைவர் லிடாபெட் சோயிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையொட்டி நாம் நமது தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமைகளைப் பார்ப்போம்.நிலத்தடி நீர் தாழ்ந்து வருவதால் தோப்புகள் குறைந்து வந்துள்ளன. அன்னியச் செலாவணி ஈட்டுதல் என்பதன் பெயரால் டீ எஸ்டேட்டுகள் காடுகளைக் காலிசெய்து விரிவடைந்தன. பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடுதலாகி அவர்களின் கோடை வாசஸ்தலங்களாகவும் மாறிவருகின்றன.இங்கு வேலைகளைச் செய்யவும் உல்லாச வாசிகளுக்குப் பணிவிடை செய்யவும் நிலப்புலத்திலிருந்து ஆள்கள் குடும்பம் குடும்பமாய் தருவிக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர்.


விளைவு
: வனத்தின் பரப்பு சுருங்கியது . மழைவளம் குறைந்ததோடு ஊற்றுநீர் சுரந்துவந்த மலைத்தொடர்களும் வறண்டன. போதாக்குறைக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மரங்களும் சாய்க்கப்பட்டன.எங்கும் வறண்டு போனதால், குடிநீருக்காக அலைந்து தவிக்கும் வன உயிரினங்களின் துயரங்கள் சொல்லிமாளாது.தண்ணீரைத் தேடும் யானைகள் மலைகளையும் வனங்களையும் ஒட்டியுள்ள நிலங்களில் நுழைகின்றன. தாகத்தின் உச்சகட்ட விளைவாக மான் கூட்டம் ஒன்று அண்மையில் பாசனக் கிணறு ஒன்றில் பாய்ந்து மரணத்தைத் தழுவ நேர்ந்தது.


சனி நீராடு என்கிறது தமிழ் இலக்கியம். மெல்ல நகரும் நடக்கும் (நடந்தாய் காவிரி என்பதுபோல) நீரில் குளித்து எழு என்பது அதன் பொருள் என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் . சிவபெருமானின் விளக்கம்.
சூரியனைச் சுற்றும் ஒன்பதில் ஒன்றான சனி கோள் ஒரு தடவை சூரியனைச் சுற்றிவர இரண்டரை ஆண்டுகளாகின்றன என்பதும் மற்றவை அதைவிடக் குறைந்த காலத்திலேயே சுற்றி வருகின்றன என்பதும் வானவியல் கணக்கு.ஆக, சனி என்றால் மெல்ல என்று பொருள் கொள்ளப்படுவதாலேயே சனி நீராடு சொற்றொடர் உண்டானது. ஆமாம்! குளிக்கின்ற மாதிரியான அந்த நீரோட்டம் இன்று வறண்டு கிடக்கின்றபோது, மற்றவற்றின் நிலையை விவரிக்கத் தேவையில்லை.அப்படி பூமியின் மேல்பரப்பில் கிடைக்கின்ற நீரைச் சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்த முடியாமல் உடல் நலத்துக்கு ஒவ்வாமை கொண்டுள்ள கனிமங்களும் ரசாயனங்களும் செறிந்து கிடக்கும் நிலத்தடி நீரை அல்லவா தமிழகத்தின் 10 ஆயிரம் கிராமங்களில் குடிநீராக வழங்கிவிடுகின்றனர். இதில் மாசுபட்ட நீரும் அடங்கும். ஆக, குளிக்கவும் குடிக்கவுமான இயற்கையான நீரோட்டத்தை அழித்த கையோடு, கிணறு மற்றும் குழாய் நீர் பாசனம் என்பதன் பெயரால் விளை நிலங்களையும் அல்லவா இன்று உப்பளமாக மாற்றியிருக்கிறோம்.


முன்பெல்லாம் ஒரு உழவு மழையில் விதைப்பு செய்து அடுத்தடுத்து வரும் இரண்டு மூன்று உழவு மழையிலேயே விளைந்து தள்ளிய புஞ்சை நில விளைச்சல் இன்று அற்றுப்போனதன் காரணங்களை யாரும் கண்டறியவில்லை.உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பது வழக்கு. ஆம், நமது கண் மூடித்தனமான பாசன முறைகளால் விளை நிலங்களும் நிலத்திற்கடியில் இருந்த உப்பைச் சுமந்து கொண்டுவிட்டபடியால், புஞ்சைப் பயிர்களும் இன்று நான்கு ஐந்து உழவு மழைக்கு ஏங்குகிறது. இப்போதெல்லாம் அந்த மும்மாரி மழை என்பது ஏது? இந்த ஆண்டு தொடக்கத்தில், புவி வெப்பமடைவதைத் தவிர்க்கும் வேலைத் திட்டங்களை ஆராய்ந்த கூட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு ஒன்றுமே இல்லை என்பது தகவல்.


மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இதற்கு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.பொதுவாக சுற்றுப்புறச் சூழல் கேட்டை படிப்படியாய்க் குறைப்பதற்கு இந்திய அரசு அக்கறை செலுத்தவில்லை. தொழிற்சாலை மற்றும் நகரக் கழிவுகளும், மறுசுழற்சிக்குப் பயன்படும் என்கிற விழிப்புணர்வு கொஞ்சம்கூட இல்லாத நம் நுகர்வோர் கண்ட மாதிரி வீசி எறிகின்ற பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் மருத்துவக் கழிவுகள் விளைநிலம் மற்றும் மழைநீரை மட்டும் அல்லாமல், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துவதை எவருமே கண்டுகொள்ளவில்லை.உலக நாடுகள் அனைத்தும் கவலைப்படுகின்றன. ஆபத்து நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது.


இப்படியே
போனால் விரலால் எண்ணக்கூடிய அடுத்த சில தலைமுறைகளில் அந்த "டைம் பாம்' வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.
இனியும் இந்தியா மெத்தனமாக இருந்தால் எப்படி? மரம் வளர்ப்பதும், புகை வெளியேற்றத்தைக் குறைப்பதும் தான் ஆபத்தைத் தள்ளிப் போடும் வழிகள். அது தெரிந்தும் தயக்கம் ஏன்? விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இதுவே!


நன்றி
: http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=65563&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!

Monday 20 July 2009

Politics-as-usual strains sustainable future


Politics-as-usual strains sustainable future

Richard Black | 10:47 UK time, Tuesday, 19 May 2009

Across the last fortnight at the UN Commission on Sustainable Development (CSD) annual meeting, there have been all kinds of threads that I wanted to pick up for this blog but will have to leave un-picked up; time, for reasons that I will come to in a minutes, just vanished before my eyes.

So; reflections on a few big themes only.

Ploughing

Firstly, does the CSD have the power to do what it's supposed to?

It's a progeny of the 1992 Rio Earth Summit, and is aimed at ensuring progress on the agenda that unifies the prime Rio concerns of the developed and developing worlds - the intersection between protecting the Earth's ecosystems and fostering economic progress in poorer societies.

That these twin aims have to be reconciled as a pre-condition for humanity's long-term good - never mind the Earth's other passenger species - seems remarkably obvious when you think about it.

It features long and loud in some of the world's global environmental treaties, notably the Kyoto Protocol - but where is it made explicit and acted upon in the economic and business framework?

Does the WTO encourage sustainable development? Do the World Bank and IMF stimulate only when environmental protection is guaranteed?

When Gordon Brown, Angela Merkel and Nicholas Sarkozy rescue financial institutions, do they insist on those institutions adopting sustainability criteria as preconditions for lending money?

There are bright spots; but overwhelmingly, the answer has to be a resounding "no". But if the concept of sustainable development and the need for it are not understood at this level, then what is the point of trying to forge non-binding agreements on sustainability through the CSD, a much less powerful institution?

This brings me to the second big theme; who knows about the CSD and its works?

Last time I went to a meeting at UN headquarters - the World Summit in 2005 - there were something like 4,000 journalists in attendance, and just getting through security on day one took almost two hours.

By contrast, hardly a news reporter came to the CSD's halls, and hardly a news report emerged.

In one sense, this is incredible. The CSD's agenda is humanity's future; so in the minds of news editors the world over, this is not a story?

Editors would argue it's not hard news because the text agreed at the end of the two-week meeting is not binding on governments, in contrast for example to the UN climate convention - and they're right.

But the absence of journalists (and many principal civil society groups) was unfortunate in that it allowed some pretty blatant political posturing to pass with little comment and little chance of governments being held accountable for their positions.

The_G20_London_Summit

And this is the third big theme I would bring out: especially from the G77 bloc, positions were adopted that from any perspective other than that of narrow politics beggared belief.

So we had repeated deletion of the word "sustainable" from the draft text - especially when placed before the word "agriculture".

So G77 countries do not want their agricultural systems to be sustainable? They would rather have support for use-it-up, burn-it-out, fertilise-it-to-death farming of inappropriate crops that would seriously compromise the next generation's capacity to feed itself?

There were concerns wrapped up in this that the EU and other western blocs might use "sustainable agriculture" as a way of foisting development-hindering environmental regulations on developing countries.

But you could also surely argue that G77 nations ought to be concerned about Western nations foisting unsustainable, grow-as-much-as-you-can-and-sell-us-the-proceeds-as-cheaply-as-possible practices on societies that do not have the capacity to resist such advances.

We even saw bids to re-open discussions about what "sustainability" means - again, incredible from any standpoint except that of politics-as-usual.

The irony of coming together for discussions on sustainable development and then trying to remove the term "sustainable" seemed lost on many delegations - another indication, I would argue, of how little the importance of the concept has permeated into governments.

What conclusions should we draw? I'm not sure I have any profound thoughts, except the pretty obvious one that 22 years after the Brundtland Commission analysed the reasons why society ought to develop in such a way as "meets the needs of the present without compromising the ability of future generations to meet their own needs", we are a very long way from that ideal (see the UN's Geo-4 report for details), and many of the important players appear blissfully ignorant of the reasoning.

நன்றி : பி.பி.சி.http://www.bbc.co.uk/blogs/thereporters/richardblack/


Tuesday 7 July 2009

புஞ்சைமேல் நஞ்சை VS நஞ்சைமேல் புஞ்சை

வாசகர்களுக்கு வணக்கம்,

நன்செய்! புன்செய் நிலம் என்ற பாகுபாடு, தமிழக விவசாயத்தில் காலங்காலமாக இருந்து வருகிறது. எனக்கு தெரிந்த வரை நன்செய் நிலம் (நன்மை+ செய்யும் + நிலம்) என்பது நல்ல நீர் மற்றும் மண் வளமிக்க நிலம். பொதுவாக ஆற்றுப்படுகைகளில், குல, ஏரிக்கரைகளில் காணப்படும் ஒன்று. நல்ல செல்லிப்பான பயிர் விளைச்சலை நித்தமும் தர வல்லமைமிக்க நிலங்களாகும். ஆற்றில் மேட்டுபகுதிகளில் இருந்து அடித்து வரப்படும் வண்டல்கள் படிந்து பூமியை வளமாக்கி இருக்கும்.

புன்செய் நிலமானது, பொதுவாக (புன்மை + செய்யும் + நிலம்) அவ்வுளவு செல்லிபான வளங்கள் இல்லாத பூமி. பெரும்பாலும், நீருக்கு மலையை நம்பியே இருக்கும், வருடத்தில் சிலகாலம் கிணற்றை நம்பி இருக்கும் அவ்வுளவே! இவை பெரும்பாலும் மேட்டுபகுதிகளில் ஆற்றின் நீர் பிடிப்பு ப்பகுதிகளில் அதிகமாக காணப்படும். கடுமையான மண் அரிப்பின் காரணமாக மண் வளமிழந்திருக்கும்.

ஆக, இதன் அடிப்படையில் இந்தியாவையோ அல்லது வேறு எந்த நாட்டின் நிலப்பரப்பை பார்த்தாலோ, கடலிலிருந்து நில மட்ட உயரம், மழை பெய்யும் அளவு ஆகியவற்றை கொண்டு நன்செய், புன்செய் நிலங்கள் எவைஎன்று நிர்ணயித்து விடலாம்.

அப்படி பார்த்தால், இந்தியாவில் கடலோர மற்றும் ஆற்றுப்படுகைகளே நன்செய் நிலங்கள். பின்னர் தக்கான பீடபூமி மற்றும் மத்திய இந்தியாவில் மலைப்பகுதிகள் பெரும்பாலும் மழையை நம்பிய புன்செய் நிலங்களே! இந்திய அரசின் புள்ளியியல் கணக்கின்படி 70% விழுக்காடு நிலங்கள் மழையை நம்பிய புன்செய் நிலங்களே.

அப்படி இருக்க சமீத்த்ய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இந்த புன்செய் -நன்செய் இயல்பில் ஒரு பெரும் மாற்றம் ஏற்ப்பட்டது. மேட்டுபகுதிகளில் இருந்து வரும்நீரை அங்குள்ள நிலங்களுக்கு உபயோகப்படுத்த எண்ணி அணைகள், நீர்பாசன திட்டங்கள் போன்றவற்றை அமைத்தனர். வளரும் மக்கள் தொகைக்கு உணவு உற்பத்தி என்ற பெயரில் இப்படிப்பட்ட யோசனையை முன்வைத்து வேளாண்மையின் இயல்பை மாற்றியது அரசு.

விளைவு!!

புஞ்சைமேல் நஞ்சை

மேட்டுபகுதியில், ஏற்படுத்தப்பட்ட புதிய நீர்பாசன திட்டங்கள் பல நஞ்சை பயிர்களான கரும்பு, நெல், வாழை போன்றவற்றை வளர்க்கு தூண்டியது. இதனால், புன்செய் காடுகளின் இயல்பு மாறியது. நிலங்களின் நாளடைவில் தன்மை பாதிக்கப்பட்டது. லாப நோக்கமான விவசாயம் மேலும் மண்ணின் மேல் ஒரு ரசாயனப்போரையே நிகழ்த்தி முடித்திருக்கிறது. விளைவு! மக்கள் அனைவரும் விவசாயம் செய்யா இயலாமல், லாபமில்லாமல் நகரங்களுக்கு பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். மண் இறுகி விட்டது. இலவச மின்சாரம், மற்றும் தொழில் வளர்ச்சி மற்றும் நகர மயமாக்கம் போன்றவைகளால் நிலத்தடி நீர் பாதாளம் சென்று விட்டது. இலையுதிகாடுகள் அழிந்துவிடும் சூழ்நிலையில் உள்ளது. கண்டாந்தரையில் என்ன செய்வது? போதாக்குறைக்கு மக்களும் புன்செய் உணவுகளை (கேப்பை, கம்பு, சோளம்) போன்றவற்றை விட்டு அரிசிக்கு மாறி கைகால் செத்து பொய் விட்டனர். இந்த திடீர் உணவு மாற்றத்தால் அதிகரித்தது நீரிழிவு நோயும், இதய நோய்களுமே! இவைதான் புஞ்சைமேல் நன்செய்யால் வந்த விளைவு.


நஞ்சைமேல் புஞ்சை:

இன்று நஞ்சை நிலங்களில் கடுமையான நீர் தட்டுபாடு நிலவுகிறது. நீர்ப்பிடிப்புபகுதிகளில் புன்செய் மேல் நஞ்சை பயிரானதால், நீர் கிடைக்காமல் கடை மடைப்பகுதிகள் தத்தளிக்கிறது. மிகப்பெரிய உதாரணம் காவேரி டெல்டா. தொழிலுக்கு (திருப்பூருக்கு), நகரவளர்ச்சிக்கு (சென்னை, பெங்களூரு, ஈரோடு, கோயமுத்தூர்) விவசாயம் (கீழ் பவானி, கர்நாடக அணைகள் ) என மேற்ப்பகுதிகளில் நீர்த்தேவை அதிகரித்ததால் கீழே நீர் வருவதில்லை. நீர் வந்தாலும் பட்டம் மாறி வரும்போது நெல்லும் பயிர் செய்ய முடியாது வேறு புன்செய் பயிரும் செய்ய முடியாது. அதனால் ,இப்படிப்பட்ட நன்செய் நிலங்கள் புன்செய் நிலம் போல் மாறி வருகின்றன. விவசாயமென்பது செய்ய முடியாது என்கிற நிலையில்தான் ஆற்றின் கடைமடைபகுதிகள் செல்கின்றன.


இந்த போக்கு மிக ஆபத்தானது. கடுமையான நீர் தட்டுப்பாடு, ஓரிரு தலைமுறைக்குள் மீட்டு வர முடியாத நிலத்தில் பொய் முடியும். அரசானது, இத்தனை கவனத்தில் கொண்டு இந்த நீர் பகிர்வு முறையை மாற்ற முற்ப்பட வேண்டும். ஒரே ஆற்றுப்படுகைகளில் உள்ள மக்களுக்குள் ஒரு நல்லிணக்கம் ஏற்படுத்த முற்ப்பட வேண்டும். பயிர் சாகுபடியை நிலம் மற்றும் நீர் வளத்திற்கு ஏற்பவும், மக்களின் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்த விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும். மேலும், நகரமயமாக்கம் கட்டுபடுத்தப்பட்டு, நீர்பிடிப்பு பகுதிகளில் permaculture போன்ற காடு-மற்ற்றும் விவசாயம் கலந்த விவசாய முறையை ஊக்குவிக்கவேண்டும்.

Sunday 5 July 2009

"உழவன் என்று பட்டம்"


இன்றைய டாக்டர் பட்டம் போல, பண்டைத் தமிழகத்தில் "உழவர்' என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது. புலவர் பெருமக்களையும் செங்கோல் வேந்தரையும் வீரர்களையும் ஆசிரியர்களையும் முனிவரையும் "உழவர்' என்று புகழ்மாலை சூட்டி மகிழ்ந்தனர். நான்கு குலத்தாரில் அந்தணர்க்கும் அரசர்க்கும் வணிகர்க்கும் இல்லாத சிறப்பும் புகழும் பெற்றிருந்தார் உழவர். நற்றிணையில் இளங்கீரனார் ஒருசிறிய ஊரைக் குறிப்பிடுமிடத்து,

""கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டாடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்'' (நற்றிணை3:4,5)

என்று வில்லேந்திய வீரர்களை "வில்லேர் உழவர்' என உருவகம் செய்து சிறப்பித்தார். அதாவது, வீரனை உழவர் என்றார் இளங்கீரனார். மருதக்கலியில்(3.1-5), பன்னூல் கற்றுத்துறைபோகிய செந்நாப்புலவரை "உழவர்' என்று சிறப்பிக்கிறார் மருதன் இளநாகனார்.

""பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளும் செல்வர்க்கு
மதிமொழி யிடன்மாலை வினைவர்போல் வல்லவர்
செதுமொழி சீத்த செவிசெறு வாக
முதுமொழி நீரா புலன்நா உழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர!''

இப்பாடலில் வரும் "புலன்நா உழவர்' என்பதற்கு "அறிவினையுடைய நாவாகிய ஏராலே உழுதுண்ணும் புலவர்' என்று பொருள் கூறுவார் நச்சினார்க்கினியர்.
இக்கலித்தொகைப் பாடல் புலவரை, புலன்நா உழவர் என்று சிறப்பித்தது; நற்றிணை, வீரரை "வில்லேர் உழவர்' என்றது. இவ்விரண்டு தொடரையும் உள்ளத்தில் நிறுத்திய வள்ளுவர் தம் குறளில் பயன்படுத்த விரும்புகிறார். புலன்நா உழவர் என்பதற்கு இணையாகக் "சொல்லேருழவர்' என்ற தொடரை உருவாக்கினார்.

""வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை'' -குறள்.872

"வில்லை ஏராக உடைய உழவரோடு பகைகொண்டானாயினும் சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளா தொழிக' என்பது அவர் திருவாய்மொழி. இவ்வாறு புலவரையும் வீரரையும் உழவராக வள்ளுவர் உருவகம் செய்ய சிறப்பை உணர்ந்து மகிழ்ந்த பரிமேலழகர் இக்குறளில் உள்ள அணியை "உருவக விசேடம்' என்றார். அதாவது "சிறப்பு உருவகம்' என்றார்.

புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியராகிய ஐயனாரிதனாரும் மன்னனை உழவனாக உருவகம் செய்து உழவர் குலத்தின் மீது கொண்டுள்ள தம் மதிப்பை வெளிப்படுத்துகிறார். வாகைத்திணை-மறக்களவழி என்னும் துறையிலக்கணம் கூறுமிடத்து,

"முழவுறழ் திணிதோ ளானை
உழவனாக உரைமலிந் தன்று''

என்று பாடுகிறார். "முழவு (மத்தளம்) போன்று திண்ணிய தோளையுடைய மன்னனை ஓர் உழுதொழில் உடைய வேளாளனாக உருவகித்து மிகுந்துச் சொல்லியது' என்பது உரை.

ஏர் எழுபது நூலில் "உழுங்குலத்தில் பிறந்தாரே உலகு உய்யப் பிறந்தார்' என்றும், "செய்யப்பாங்கு படக்கிடந்த செழுஞ்சாலி நன்னாற்றைக் கைப்பாங்கு புகுந்து நடக் கற்றாரே கற்றார்' என்றும் உழவரைப் புகழ்ந்தும் மனநிறைவு அடையாமல் கம்பன் ராமாவதாரத்தில், சரவங்கமுனிவனை நீத்தரிய நெடுங்கருணைக்கு நிலையமான ராமன் சந்தித்து உரையாடும் காட்சியை,

"வரிசிலை உழவனும் மறை உழவனை "நீ
புரிதொழில் என்!அது புகலுதி' எனலும்'' ஆரணிய.சரவண:38

என்கிறார் கம்பர். ராமனுக்கு எத்தனையோ அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள் தந்தும் தணியாத தாகங்கொண்ட கம்பன் ஈண்டு "வரிசிலை உழவன்' என்று கூறி மகிழ்கிறான். வேதங்கள் பயின்றவன் சரவங்கமுனிவன்; அவனை வேறு வார்த்தைகள் கூறிப் புகழ்வதைவிட "மறை உழவன்' என்றால்தான் முனிவனுக்கும் மதிப்பு; தன் தகுதிக்கும் மதிப்பு என்று கருதியே முனிவனை உழவன் என்றான்.

புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் "உழவன் வென்றி' என்ற துறையில் ""தத்துநீர் ஆர்க்கும் கடல்வேலித் தாயர்போல் வித்தித்தரு வான் விளைவு'' என்று தாயாருடன் உழவனை ஒப்பிட்டார். இளங்கோவடிகள் ""பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்'' என்று உழவரை நாடுகாண்காதையில் "காவிரியின் புதல்வரா'கக் கண்டார் அன்று. மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடைபோர்த்து மணக்க மணக்க நடந்த காவிரித் தாய் இன்று கழிவு நீரில் நனைகிறாள்; காவிரிப் புதல்வர் கண்ணீரில் நனைகின்றனர்.

Wednesday 1 July 2009

போதி மரமும், எம்.எஸ். சுவாமிநாதனாரும்


போதி மரமும், எம்.எஸ். சுவாமிநாதனாரும்

2500 வருடங்களுக்கு முன்பு வடக்கில் போதி மரத்தடியில் அமர்ந்த ஒரு இளைஞன் ஞானோதயம் பெற்றான். இன்றோ தெற்கில், அந்த இளைஞன் வழி நடக்கும் நாட்டிற்கு (??!!!) சென்று வந்துள்ள ஒரு முதியவர் காலம் கடந்த பின் ஞானோதயம் பெற்று வந்துள்ளார் போல தெரிகிறது. இதை வரவேற்கவே வேண்டும்.


சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்துப் பேசியவர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஈழப் பகுதிகளில் எத்தகைய விவசாயத்தை மேற்கொள்ளவேண்டும் என்று விவாதித்துத் திரும்பியிருக்கிறார். அப்போது கொடுத்த ஆலோசனைகள் கீழே சொல்லியிருப்பது.


'உயிர்ச்சூழல், சுற்றுச்சூழல் கெடாமல், விவசாயிகளின் பாரம்பர்ய அறிவுக்கு பங்கம் வராமலும், புதிய, நவீனத் தொழில்நுட்பங் களை பாரம்பர்யத்துடன் இணைத்து விவசாயம் புதுப்பிக்கப்பட வேண்டும் (Bio-diversed, Eco-friendly, Traditional knowledged agriculture)

விவசாயிகளின் விதியை நிர்ணயிப்பவை விதைகள்தான். இப்போது விதைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. விதைக்காக விவசா யிகள் காத்து இருக்கக் கூடாது. நல்ல தரமான விதைகளை விவசாயிகள், தங்களது கிராமங்களி லேயே (Seed villages) உருவாக்க வேண்டும். மேலும், இயற்கை உரம், இயற்கைப் பூச்சிவிரட்டிகளை (Bio - fertilizer, Bio - pesticides) இந்தியா கொடுத்து உதவவேண்டும்.

ஊரெல்லாம் தோண்டியக் குழிகளாலும்... ஆங்காங்கே நிலப்பரப்பின்மீது தொடர்ந்து, ஓடிய கனரக வாகனங்களாலும்... மண்ணின் கட்டமைப்பு சிதைந்து கிடக்கிறது. மண்ணின் வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.

விவசாய வேலைக்கு ஆட்களே கிடைப்பது இல்லை. (No one is willing to work under the sun) இருக்கும் கொஞ்ச விவசாயத்தையும் கவனிப்பது பெண்கள். எனவே, பெண்களின் தளிர் விரல்கள் தாக்குப் பிடிக்கிற அளவுக்கு விவசாயத்தை மாற்றி எளிமைப்படுத்த வேண்டும்.

மானியம், சில சமயங்களில் விவசாயிகளை மரணப் பாதைக்கு இழுத்துச் சென்றுவிடுகிறது. ரசாயன உரங்களுக்கு அளவுக்கு அதிகமாக மானியம் வழங்கப்படுவதால், விவசாயிகள், மண் ணின் நலனைக் காக்கும் உரங்களான பசுந்தாள் உரம், மண்புழு உரம், இயற்கை உரம், காற்றிலிருந்து நைட்ரஜனை பிடித்து பூமியில் சேமித்து வைக்கும் இரட்டை இலை பசுமைத் தாவரங்கள் இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு, எளிதாகக் கிடைக்கும் ரசாயன உரங்களை அளவுக்கு அதிகமாக நிலத்தில் கொட்டி, மண்ணைக் கொன்று விட்டார்கள். எனவே, உடனடி தேவை மண் நலம் காப்பாற்றப்பட வேண்டும்.

அறுவடைக்குப் பிறகு தானியங்களை சேமிப்பது முக்கியம். அதற்கானத் தொழில்நுட்பம், கிடங்குகள், குளிர்சாதனக் கிடங்குகளை இந்தியா கட்டிக் கொடுக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக விளைபொருட் களுக்குக் கட்டுப்படியான... அதாவது அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை விஞ்ஞான முறைப் படி கணக்கிட்டு கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் இருக்கும் விவசாயத்தையாவது காப்பாற்ற முடியும். இளைஞர்களை விவசாயத் தின் பக்கம் இழுக்க முடியும்.'

-இப்படிக்கு
டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்.

ஊழலில் மழுங்கி சின்னா பின்னமாகி, மக்களும் மதி மழுங்கியுள்ள தமிழகத்தில் நல்ல கருத்துகளை கூறுவதை விட உள்நாட்டு சண்டை முடிவுக்கு வந்துள்ள தீவுபகுதியில் இது போன்ற நல்ல விசயங்களை மதி மழுங்காத மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்று கூட எண்ணி நமது விஞ்ஞானி இவ்வாறு கூறி இருக்கலாம். எது எப்படியோ? இது வரவேற்க கூடியதே! பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி: பசுமை விகடன்