Saturday 16 October 2010

மரபாள புராணம் - ஏர்ப்படலம் - செய்யுள் - 1

ஈட்டம் ஆகிய தொழில் எலாம் இத்தொழில் இன்றி

ஆட்டம் இல்லை என்று அறைந்தனம் ஆருயிர் அடைந்த

கூட்டம் எத்தனை அத்தனைக்கும் குறையாமல்

ஊட்ட நின்றவல் ஏர்த்தொழில் இலக்கணம் உரைப்பாம்.

உலகில் நடைபெரும் பல்வேறு தொழில்களும் இந்த உழவுத்தொழில் இயங்கினாலன்றி நடைபெறா என்று கூறினோம். இனி உலகில் தோன்றிய சீவராசிகளின் கூட்டம் எவ்வளவோ அவ்வளவிற்கும் குறையாமல் உணவு ஊட்டவல்ல ஏர்த்தொழிலின் இலக்கணம் சொல்வோம்.

No comments:

Post a Comment