Saturday 31 January 2009

இயற்கை வள திவால்...



சர்வஜனங்களுக்கும் எனது அநேக நமஸ்காரங்கள் (கொஞ்சம் ஓவரா இருக்கோ) ,

அமெரிக்க
வங்கி திவால்கள் பற்றியே தெரிந்துள்ள நம் மக்கள், இயற்க்கை வளஆதாரங்களின் திவால்கள் (Ecological Bankruptcies) பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம், எதிர்காலத்தில் இது கட்டாயமாகும். எடுத்துக்காட்டாக தமிழ் நாடு பொருளாதாரத்தில் முன்னேரியதாயினும், அதன்நீராதாரங்களை அடமானம் வைத்து இதை சாதித்துள்ளது. விலை நிலங்களில்முறையட்ட்ற பயிர் மற்றும் பாசன முறைகளால் நிலவளத்தையும்எதிர்காலத்திற்கு ? யாக்கியுள்ளது.

மொத்தத்தில்
தமிழ் நாடு நீர், நில வளங்களில் திவாலாகியுள்ளது. இதனை இன்றைய பொருளாதார நிபுணர்கள் உணர்த்து எச்ச்சரிக்கிறார்க்கள்.

Ecological Economics
என்னும் புதிய பொருளாதார பார்வை மூலம் தற்போதையபொருளாதார தத்துவங்களை சீர்திருத்துகிறார்கள். நம் நாட்டு மேதாவிகள்இதனை சிறிதேனும் கண்டுகொண்டதாகவோ உணர்ந்ததாகவோதெரியவில்லை.


Ecological bankruptcy is worser than economic bankruptcy or financial bankruptcy.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்.


Looming ecological credit crunch - WWF DG says

29 Oct 2008 Gland, Switzerland: The world is heading for an ecological credit crunch as human demands on the world's natural capital reach nearly a third more than earth can sustain.

“The world is currently struggling with the consequences of over-valuing its financial assets,” said WWF International Director-General James Leape, “but a more fundamental crisis looms ahead -- an ecological credit crunch caused by under-valuing the environmental assets that are the basis of all life and prosperity.”

“If our demands on the planet continue to increase at the same rate, by the mid-2030s we would need the equivalent of two planets to maintain our lifestyles.”

“We are acting ecologically in the same way as financial institutions have been behaving economically - seeking immediate gratification without due regard for the consequences,” said ZSL co-editor Jonathan Loh. “The consequences of a global ecological crisis are even graver than the current economic meltdown.” “Around 50 countries are currently facing moderate or severe water stress and the number of people suffering from year-round or seasonal water shortages is expected to increase as a result of climate change,” the report finds.

“If humanity has the will, it has the ways to live within the means of the planet, but we must recognize that the ecological credit crunch will require even bolder action than that now being mustered for the financial crisis” Mr Leape said.

The 2008 Living Planet Report can be downloaded from www.panda.org/lpr/08


Living Planet Report 2008 - James Leape




Living Planet Report 2008 - Pavan Sukhdev



Living Planet Report 2008 - Achim Steiner

உணவு ஏற்றுமதி-இறக்குமதி தேவையா?



எல்லாத்துக்கும் நமஸ்காரமுங்க!

நமஸ்காரம்கிறது தமிழ் இல்லைன்னு யாரும் கருப்பு, சிவப்பு கொடி புடிச்சிடாதீங்க! சரி நாம தலைப்புக்கு வருவோம். எல்லாம் காலகொடுமைங்க! இந்த மாதிரி தலைப்பு எல்லாம் பேச வேண்டிஇருக்கு. ஒரு காலத்துல வாணிகம் செய்றவங்க பொன், மாணிக்கம், மரகதமுன்னு பல அறிய வகை பொருட்களைத்தான் ஏற்றுமதி இறக்குமதி செய்வாங்க! இப்ப எல்லாம் நம்ம ஊரு படமட்டை முதல் மாம்பழம் வரை கூட ஏற்றுமதி ஆகுது. எல்லாம் ரொம்ப சீக்கிரமா சென்றடையும் வசதி இருப்பதால் எல்லாம் நடக்குது. முன்னைஎல்லாம் கடல் பயணம்கிறது திரும்பாபயணமா இருந்துச்சு. ரோமானியர்கள் அரபிகடலை தாண்டிவரும்போது ஓட்டை உடைசல் பலகைகளை பிடித்துகொண்டு இறங்கிய காலமுண்டு. இன்று அப்படிப்பட்ட கஷ்டங்கள் இல்லை. எரிவாயு, திரவ எரிபொருள் போன்றவை மிக எளிதாக கிடைப்பதால் அதை எங்குவேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என்பதால் மனிதனுக்கு அவனது ஆசைக்கு ராஜபோக வாழக்கைக்கு எல்லையிலாமல் அடிப்படையான உணவு முதல் ஆடம்பர உணவுவரை ஏற்றுமதி இறக்குமதி செய்கிறோம். அதில்பொருலாதார தடை, தரம் என பல விதிமுறைகள்.

சூரியன் - இவர்தான் பூமியின் உயிர்களுக்கு சக்தி கொடுப்பவர். உலகில் உணவு என்பதே சூரியனின் பார்வையால்தான் உற்ப்பத்தியாகிறது. துருவ நாடுகளில், அதனை ஒட்டியுள்ள நாடுகளில், பாலைநிலங்களில் வாழும் மக்களுக்கு சூரியனின் கருணை கொஞ்சம் குறைவு. உணவு உற்பத்தி குறைவாக இருக்கும் . அதனால் பஞ்சம் பட்டினி என்பது அடிக்கடி நிகழும் வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும்போது நாடோடிகலாகும் மக்கள் கூட்டம். அதுவும் மக்கள் தொகை அபரிதமானால் சொல்லவே வேண்டியதில்லை. இப்படித்தான் நடந்தது ஏகாதிபத்திய நாட்களுக்கு முன். ஐரோப்பிய நாடுகளில் மக்கள்தொகை பெருக்கம், உணவு உற்பத்தி குறைவு, நோய், முதலான காரணங்களால் அங்கிருந்த அரசர்களுக்கு பிறநாடுகளின் மீது படையெடுத்து மக்களுக்கு செல்வத்தை உணவை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. விளைவு, கடல் பயணங்களில் பல நிலங்களை (இன்றைய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க, ஆசிய என புகுந்தனர்) பல நாடுகளில் குடியேறினர். உள்ளூர் வாசிகளை ஒழித்தனர். உருளைக்கிழங்கை முதலில் கண்டுபிடித்து ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தனர். குதிரைக்கும் மக்களுக்கும் உணவானது. பல அரியவகை உணவுகளை (தேயிலை, காபி, கரும்பு சர்க்கரை ) என பலவற்றை அடிமைகளை கொண்டு உற்பத்தி செய்து (ஏகாதிபத்திய) நாடுகளிலிருந்து கொண்டு சேர்த்தனர். செல்வத்தை பெருக்கினர். சுகமாக வாழமுற்ப்பட்டனர். ஆனால் மக்களுக்கு எல்லாம் தங்குதடையின்றி கிடைத்ததால் தொகை பெருகியது. அதற்க்கு விவசாயத்தை பெருக்கினர். அறிவியலில் பல சாதனங்களை கண்டுபிடித்து உணவு உறப்பத்தியை செயற்கையாக பெருக்கினர். இப்படி இருக்கையில், நிலத்தடி எரிபொருள் கண்டுபிடித்தது மிகவும் சாதகமாகி உலகம் முழுவதும் தொழிநுட்பம் சார்ந்த வளர்ச்சி என்று கூறி ஏகாதிபத்தியத்தை பொருளாதார தொழிநுட்ப ஏகாதிபத்தியமாக மாற்றி விட்டனர்.


இந்த செயற்கையான பொருளாதாரமும், தொழினுட்பமும் படைத்த சாதனை மக்கள் தொகை பெருக்கம். அதுவும் உலக அளவில்.

ஒருகாலத்தில் ஒழைக்கிற குடியானவனை பார்த்தால் எதுக்கு இப்படி மாடா ஒழைக்கிரீங்கன்னு கேட்டா, எல்லாம் கால்வயிறு சோத்துக்குதான் ன்னு பதில் வரும். இன்னைக்கு எவன் ஒழைக்கிறான்? எல்லாம் காசு சேர்ப்பதிலேயே குறியா இருக்கிறான். எப்படி எத அழிச்சு எத ஏற்றுமதி பண்ணி எப்படி பணக்காரனாவது. எப்படி வங்கி கணக்கா பெருக்கிரதுன்னுதான் குறியா இருக்கிறான். கஷ்டப்படாம சோறு திங்கனுன்னு நினைக்கிறான்.

ஊறுகாய ஐரோப்பிய ஆடம்பரத்துக்கும், அவன் கொடுக்கும் டாலருக்கும் ஏற்றுமதி பண்றோம், இவன் தேயிலை பானம் அருந்த இங்க காட்டை அழிக்கிறோம். இவன் மாம்பழம் தின்ன அங்க இருக்கிற மானாவாரி நிலங்களில் ஓட்டை போட்டு நெறி உறிஞ்சி இவன் கொடுக்கிற சொட்டு நீரையும் போட்டு இவனுக்கு ஏற்றுமதி பண்ணுறோம். மாபழம் திங்கலைன்ன, டீ குடிக்கலைன்னா செத்தா போயிடுறான். எல்லாம் இவனது ஆடம்பர வாழ்க்கைக்கு நாம நம்ம இயற்க்கை செல்வங்களை அடகு வைத்து வேலைசெய்கிறோம். ஆக மொத்தம் நாம் இவனது அடிமைகள். அப்புறம் இவன் பின்தங்கிய நாட்டுக்கு நிதியுதவின்னு புரளி பேசி ஐ.நா. சபை உலக வங்கின்னு ஏற்படுத்தி பிச்சை போடுவான். அதுல நம்ம கோமண உருவி அரசியல்வாதிகள் செத்த பணத்தில் போடும் வாய்க்கரிசியில் பங்கு கேட்பவர்கள் பலவற்றை சுரண்டி சுவிஸ் வங்கி கணக்கில் முடக்கி, பிறகு இருக்கும் கொசுறை வைத்து ஏதாவது செய்து விட்டு போலி அறிக்கை த்யார் செய்து அடுத்த செட்டில்மண்டுக்கு ரெடி பண்ணிடுவான்.

எப்படியோ ஆரம்பிச்ச ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் இன்று உலக பொருளாதாரம், உலக உணவு ஏற்றுமதி -இறக்குமதி ன்னு போய் இணைய வர்த்தகம் வரைக்கும் போய்டிச்சுங்க. எல்ல்லாம் காலக்கொடுமை. ஒன்னும் சொல்றதுக்கில்ல. நம்ம இயற்க்கை வளங்களை அதாவது நம்ம நிலங்கள் இன்னும் அடுத்த தலைமுறைக்கு சோறு போடும் வகையிலாவது விட்டுவிட்டுப்போவனம். எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா இந்த சந்ததியிலேயே அழிச்சிபுடகூடாது.

காலம் வருந்துங்க! ரொம்ப சீக்கிரமா வருது! ஊர் ஊருக்கு அங்கங்க உற்பத்தி செய்து தின்பதை மக்கள் ஏற்க்க்ப்போகிறார்கள். இந்த உணவு இறக்குமதி-ஏற்றுமதி வேலையையெல்லாம் நிறுத்த வேண்டும் மக்கள். அட உணவு இறக்குமதிங்கிறது, ஆந்திராவிலேர்ந்து அரிசியை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்து சாப்பிடருதும்தான். நாட்டை விட்டு நாடு போறது மட்டுமில்ல. தேவைக்கு ஏற்ப உற்பத்தி பண்ணி கொஞ்சம் சேமித்து சாப்பிடும் பழக்கம் வர வேண்டும். இந்த உணவு ஆடம்பரம் குறைய வேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்தமாக அனைவரும் பட்டினிசாவை எதிர்காலத்தில் எதிர்நோக்க நேரிடும்.


Monday 26 January 2009

கள்ளிக்காட்டு இதிகாசங்களும், அறுபது வருட இந்திய குடியாட்சியும் (DAM-AGE is a DAMAGE)


எல்லாத்துக்கும் வணக்கமுங்க!

ரொம்ப நாளா, இந்த கட்டுரையை எழுதோனும்ன்னு இருந்தேன். இன்னைக்குதான் சமயம் கைகூடியது. என்னடா வைரமுத்துவோட கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், இந்திய குடியாட்சியையும் முடிச்சு போட்டிருகானேன்னு பாக்குறீங்களா? சம்பந்தம் உள்ளது. கள்ளிக்காட்டு இதிகாசம்கிறது பல கோடி மக்களுக்கு வைரமுத்து எழுதிய அஞ்சலி. புத்தகத்தை படித்தவர்களுக்கு அது புரியும்.

நான் கல்லூரியில் படிக்கும் சமயம். இரண்டாமாண்டு என்று நினைக்கிறேன். கோயமுத்தூர் விஜயா பதிப்பகத்திற்கு வைரமுத்து வருகை தந்தார். கள்ளிக்காட்டு இதிகாசம் புத்தகத்தை வெளியிடுவதற்கு. முன்னூறு ரூபாய் கொடுத்து வாங்கினேன். கையழுத்திடும் போது என்ன செய்கிறேன் என்று கேட்டார். விவசாயப்பல்கலையில் இளங்கலை என்றேன். இந்தப்புத்தகம் உன் பாடத்திற்கு மிகவும் உபயோகமாக இருக்குமென்றார். வாங்கிப்படிக்க ஆரம்பித்தேன். வாழக்கையில் முதல் முதலாக வாங்கிப்படித்த நாவல். ஒரே வாரத்தில் படித்து முடித்தேன். கதை இதுதான், ஒரு கிராமத்தில் பஞ்சகாலத்தில் ஒரு தாத்தாவும், பேரனும் சேர்ந்து தங்கள் நிலத்தில் ஒரு கிணறு தோண்டுகிறார்கள். அதை தோண்ட ஆரம்பிப்பதற்கு முன்பு வரும் கதை, கிராமத்தில் அதுவும் வானம் பார்த்த பூமியில் வாழும் குடியானவர்களின் வறுமையான வாழ்க்கை, இந்தியாவிற்கே உரித்தான பிற சமூக போராட்டம் போன்றவற்றை தத்தரூபமாக எடுத்துக்காட்டும். இறுதியில் முப்பது அடியில் தண்ணீர் பேர்த்து எழும். இருவரும் சந்தோசத்தில் மகிழ்வார்கள். அப்போது பேரிடி போல் வரும் ஒரு செய்தி. அணை கட்டுவதற்கு போட்ட திட்டத்தில் அவர்களது நிலம் அடங்கிவிட்டது. அனைவரும் நிலத்தை விற்றுவிட்டு அவர்களது வீடுவாசலை காலிசெய்து விட்டு சில வாரங்களில் வெளியேறவேண்டும் என்று உத்தரவு வருகிறது. கஷ்டப்பட்டு தோண்டிய கிணறு, சோறு போட்ட நிலம், வாழ வைத்த வீடு என அனைத்தையும் விட்டு போக மனமில்லாது அந்த பெரியவர் மனமொடிந்து இருப்பார். இறுதிநாள், அணை மதகு போட்டதும் நீர் குபுகுபுவென்று மேலேறி அவர்களது கிராமத்தை மூழ்கடிக்கும். கிழவனும் பேரனும் தங்கள் நிலமும், கிணறும் மூழ்குவதை பார்த்து கண்ணீர் விட்டபடி வீட்டிலுள்ள பொருட்களை காலி செய்து கிளம்புவார்கள். ஆனால், விரைந்து வந்த நீர் அவர்கள் முழுவதுமாக காலி செய்யும் முன் மூழ்கடித்து விடும். இறுதியில் கிழவனின் உயிர் ஊர் எல்லையை தாண்டும் முன் சோகத்தில் பிரிந்து விடும். இப்படிப்பட்ட கதை நடந்ததாக கவிஞர் கூறியுள்ளது தென்பாண்டி நாட்டு வைகை அணை நிர்மாணிக்கும் போது அங்கு நிகழ்த்த ஊர் மற்றும் குடிபேர்ப்புகளின் நினைவாக தன் தாய்மண்ணின் சோகத்தை காவியமாக வடித்துள்ளார்.

இது மாதிரி கதைகள் என்னமோ வைகை அணையில் மட்டும் நடக்கவில்லை. சுதந்திரம் பெற்ற இந்தியாவில் வெள்ளைக்காரன் நீர்ப்பாசனப்பரப்புகளை அதிகப்படுத்தி வரி வசூலை அதிகப்படுத்த வேண்டி திட்டம் தீட்டி வைத்திருந்த அணைக்கட்டு மற்றும் பாசனத்திட்டங்களை நேரு மாமா மிகவும் சிரத்தையுடன் செயல்பட்டு பணியை தொடர்ந்து செம்மையுற நடத்தினார். மேலும் பல திட்டங்களை உருவாக்கினார். அணைகளை புதிய இந்தியாவின் கோவில்கள் என்று வருணித்தார். இப்படி கட்டப்பட்ட அணைகள் இந்தியா முழுவதும் சுமார் 3500 ஆகும். இதில் இடம்பெயர்ந்த ஆதிவாசிகள், மற்றும் பழகுடியினறது எண்ணிக்கை இன்று 5.6 கோடி ஆகும். இந்தியாவின் வறுமை உயர இதுவும் ஒரு காரணம். ஆனால், இப்படிப்பட்ட திட்டங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பது பண்டித நேரு போன்றோரின் யோசனை. நாட்டின் இயற்க்கை வளங்களை கிட்டத்தட்ட அரசுடமையாக்கும் வகையில் குடியாட்சியை நிறுவி வளர்ந்தது "சுதந்திர இந்தியா". மக்கள் அரசு சொல்வது போல் கேட்டுக்கொண்டனர். பசுமைப்புரட்சி என்று திருட்டுத்தனமாக விலை நிலங்களில் யூரியாவை கொட்டி பயிர் நன்கு வளர்கிறது என்று கூறி விவசாயிகளை தங்கள் பக்கம் கொண்டு சென்றனர். விளைவிக்கும் பயிர் உண்ணும் உணவு என அனைத்தையும் அரசின் திட்டங்களாலும் அணைக்கட்டுகாலும் மாற்றியமைத்தனர். பத்து வருடங்களில் கோதுமை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு கொண்டு வந்தனர். பின்னர் அதற்க்கு பசுமைபுரட்சி என்று பெயர் வைத்து, அது இன்று எப்படிப்பட்ட விச்வரூபமான பிரச்சனைகளை கிளப்பியுள்ளது அனைவரும் அறிந்தததே.


நதிகளை தடுத்து நிறுத்தி அணைகட்டி விவசாயம் செய்வது தவறா என்று பலரும் கேக்கலாம். சில மக்களின் வாழ்வாதாரங்கள்தானே கெடுகிறது, அவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை கொடுத்துவிடலாம் என்று நினைக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட பெயர்வுக்கு பின் ஒரு இடத்தில் புதிதாக வாழத்தொடங்குவது என்பது எளிதல்ல. அணைகட்டுவது என்பது புதிதல்ல நம்முடைய மன்னர்கள் கூட குளம், ஏரி கட்டினார்களே என வாதாடலாம். ஆனால், மன்னர் காலத்தில் கட்டப்பட்ட குளங்கள், ஏரிகள் இயற்க்கை சூழலையோ, மக்களின் வாழ்வாதாரங்களியோ குலைப்பதாக இருந்ததில்லை. உதாரணமாக தாமிரபரணி, நொய்யல், பாலாறு போன்றவற்றில் ஏரி குளங்கள் கட்டப்பட்டன. அவை தடுப்பணைகலாகவும், கிளை வாய்க்கால்கலாகவுமே இருந்ததுண்டு. நீரின் ஓட்டத்தை என்றும் பெரிய அளவில் மறித்ததாக இருந்ததில்லை.

பிரிடிஷ்-நேரு வகையறாக்கள் கொண்டுவந்த பிரமாண்ட அணைகள் பல காடுகள், கிராமங்கள், மக்களின் பழக்கவழக்கம், மொழி கலாசாரம், விதைகள், வாழ்க்கைமுறை என இவையனைத்தையும் விலையாக வாங்கிவிட்டது.


மக்களின் குடிமைகளை இரெண்டே தலைமுறைகளில் பெயர்த்தெடுத்து விட்டது. கிராமங்கள் இன்று காலியாகி விட்டன. இன்று கூட காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பது இந்த நாட்டின் இளைய தலைமுறைக்கு சாபக்கேடாகும். உலகமயமான பின்பு, ஏற்க்கனவே கிராம நிர்வாகத்தை, குடிமையை ஒழித்து கட்டியிருந்த அரசு உலக கார்ப்பரேட் கம்பனிகளுக்காக மீதமிருந்ததையும் பொருளாதார வளர்ச்சிஎன்ற பெயரில் நகரங்களுக்கு உறிஞ்ச ஆரம்பித்து விட்டன. கடந்த இருபது வருடங்களில் பல நகரங்களுக்கு அதனை சுற்றி பெருகியுள்ள தொழில்களுக்கு இந்திய நதிகள் சப்லையாக ஆரம்பித்துவிட்டது. மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் நர்மதை நதியில் நடந்த சர்தார் சரோவர் அணைக்கட்டின் உயர அதிகரிப்பு அதனை தொடர்ந்து வெளியேற்றப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் அவர்களின் வாழ்விழப்பு இன்றும் எடுத்துக்காட்டு. ஆனால் அணைகட்டி நீரானது குஜராத் மாநிலத்திற்கு குடிநீர் மற்றும் தொழிசாலைகளுக்கு பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

அத்தோடு குடியரசு நாட்டில் அப்பாவி படிப்பறிவில்லாத குடிமக்கள்தான் உரிமைகள் மறுக்கபடுகிறார்கள் என்றால், நர்மதை நதித்திட்டத்தை எதிர்த்து கேட்ட அருந்ததி ராய் எனும் எழுத்தாளரை சுப்ரீம் கோர்ட் நாட்டின் உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகளை இழிவுபடுத்தியதாக கூறி சிறையிலடைத்தது. இதுதான் இந்தியாவின் குடியரசு. இந்த குடியரசு யாருக்காக செயல் படுகிறது, இந்த நீதிமன்றங்கள் யாருக்காக இருக்கின்றன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

என்னை கேட்டால், தேசிய தினத்தன்று கொடிகளை அரைகம்பத்தில் பறக்கவிட்டு துக்கம் அனுசரிக்க வேண்டும். இன்னும் சுதந்திரமோ, குடியுரிமையோ இந்த நாட்டிளிருப்பதாக யாரும் நினைத்தால் அவர்களைப்போன்ற மூடர்கள் யாரும் கிடையாது.


கீழுள்ள நர்மதை நதியின் கள்ளிக்காட்டு இதிகாசம் இந்திய குடியாட்சியின் தத்துவத்தை நன்கு விளக்கும்.

DAM/AGE: A Film with Arundhati Roy

http://video.google.com/videoplay?docid=5268815252249892078




காந்தியும், குடியரசும்/ MK Gandhi and democracy



“My notion of democracy is that under if the weakest should have the same opportunity as the strongest………No country in the world today shows any but patronizing regard for the weak……….Western democracy as it functions today is diluted facism………The democracy can’t be worked by twenty men sitting at the centre. It has to be worked from below by the people”.

“I believe that if India and through India the world is to achieve real freedom then sooner or later we shall have to go and live in the villages in huts, not in palaces. Millions of people can never live in cities and palaces in comfort and peace”.



O tiller of the soil,
Rightly they call you father of the world;
You, and you alone, provide
For all mankind;-Cotton, fruits, flowers and grass,
And food grains too,
The food that sustains all creatures,
And clothing that is welcome to all.Braving heat and rain,
Unremitting in toil,Robust of health.
Ever you moved in contentment.
Of worth supreme is the tiller's work,
Work that tends to others's good;
Tireless in your labour,
You teach a good lesson to the world.

Those Indians who wish to be happy in this country or wish to render any real service to India should ponder over the poem given above and try to act upon it. Even if there is a single reader who is convinced that he must take to agriculture, he need not wait for others to join him.
---Written by Gandhiji in his article, 'Supreme virtue of Agriculture' published in Indian Opinion in 1910.

Democracy
(From epigrams of Gandhi)

Democracy necessarily means a conflict of will and ideas, involving sometimes a war to the knife between different ideas. T-3-291

Democracy can only represent the average, if not less than the average. MM-343

The very essence of democracy is that every person represents all the varied interests which compose the nation. T-5-75

Democracy comes naturally to him who is habituated normally to yield willing obedience to all laws, human or divine. T-5-104

Democracy demands patient instruction on it before legislation. MM-344

Democracy, disciplined and enlightened, is the finest thing in the world. MM-338

Democracy and dependence on the military and police are incompatible. MM-347

Democracy is a great institution and, therefore, it is liable to be greatly abused. MM-345

Democracy is an impossible thing until the power is shared by all, but let not democracy degenerate into mobocracy. MM-345

Democracy is not a state in which people act like sheep. MM-341

Democracy and violence can ill go together. MM-347

Evolution of democracy is not possible if we are not prepared to hear the other side. MM-342

The spirit of democracy cannot be imposed from without. It has to come from within. T-3-301

In the days of democracy there is no such thing as active loyalty to a person. You are, therefore, loyal or disloyal to institutions. T-3-25

Democracy will break under the strain of apron strings. It can exist only on trust. MM-339

My notion of democracy is that under it the weakest should have the same opportunity as the strongest. T-5-277

To safeguard democracy the people must have a keen sense of independence, self-respect and their oneness. MM-339

What is really needed to make democracy function is not knowledge of facts, but right education. T-7-209

Intolerance, discourtesy and harshness are taboo in all good society and are surely contrary to the spirit of democracy. MM-342

The line of demarcation between democracy and monocracy is a often thin, but rigid and stronger than unbreakable steel. MM-346

In true democracy every man and woman is taught to think for himself or herself. MM-338

The spirit of democracy cannot be established in the midst of terrorism, whether governmental or popular. MM-347

The spirit of democracy is not a mechanical thing to be adjusted by abolition of forms. It requires change of the heart. MM-338

People in a democracy should be satisfied with drawing the Government’s attention to mistake, if any. MM-341

You have to uphold democracy, and democracy and dependence on the military and the police are incompatible. T-7-284

Under democracy, individual liberty of opinion and action is jealously guarded. MM-341

No perfect democracy is possible without perfect nonviolence at the back of it. MM-348
The only force at the disposal of democracy was that of public opinion. T-8-100

True democracy is not inconsistent with a few persons representing the spirit, the hope and the aspirations of those whom they claim to represent. T-3-301

The voice of the people may be said to be God’s voice, the voice of the Panchayat. MM-340

A born democrat is a born disciplinarian. T-5-104

A democrat must be utterly selfless. He must think and dream not in terms of self or of party, but only of democracy. T-5-104

The true democrat is he who with purely nonviolent means defends his liberty and, therefore, his country’s and ultimately that of the whole of mankind. MM-347

A democratic organization has to dare to do the right at all costs. MM-346

If fighting for the legislatures meant a sacrifice of truth and non-violence,
democracy would not be worth a moment'’ purchase. T-4-156

Corruption and hypocrisy ought not to be inevitable products of democracy, as they undoubtedly are today. T-1-131

But today the discussion is...
India really a democracy or Nehru-Gandhi Dynastic Monarchy
Part1

Part2

குடியரசு தினம் என்னும் சடங்கு



அனைவருக்கும் வணக்கம்,

சும்மா பார்மாலிட்டிக்கு குடியரசு தின நாள் நல்வாழ்த்துக்கள். என்ன பாக்குறீங்க! என்ன தேச துரோகின்னு திட்டிடாதீங்க! குடியரசு தினம், சுதந்திர தினம், தேசிய ஒருமைப்பட்டு தினம், கொடி நாள், இப்படி பல சடங்குகள் இந்தியா என்னும் தேசியத்தில் உண்டு. இந்தியாவில் உள்ள பல கலாச்சார சடங்கு சம்பிரதாய பண்டிகைகளை போலவே இந்த தேசிய தினம்களும். உலகமயமான தேசியத்தில் கலாச்சார பண்டிகை நாட்களும், தேசிய தினங்களும் அதன் உற்சாகத்தை இழந்துவிட்டன. இவை வெறும் விடுமுறை நாட்கள் அவ்வுளவே! அதைத்தாண்டி வேறுஎதுவும் இருப்பதாக தோன்றவில்லை.


இந்திய என்னும் தேசியம் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் நிலைத்து நின்றுவிட்டது! வெளிப்போக்கிற்க்கு? உள்ளே(மக்கள் மனதில்) என்றோ நீங்கி விட்டது. மக்கள் மனதில் உள்ள தேசியம், குடியரசு என்பது நாட்டை ஆளும் பிரதமர், குடியரசுத்தலைவர், அதற்க்கு கீழுள்ள மந்திரிகள். தாங்கள்தான் குடியரசின் ஆதாரங்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்து நீங்கி விட்டதா? அல்லது நீக்கப்பட்டு விட்டதா? என்ற கேள்வி பல நாட்களாக என் மனதில் உண்டு.


1990 வரை அனைத்திற்கும் அரசை எதிர்பார்த்தோம், அதன் பிறகு அரசு சார தனியார் நிறுவனங்களை எதிர்பார்த்திருக்கிறோம். இப்படி எதற்கும் பிறரையே எதிர்பார்க்கும் நாட்டு மக்களை குடியரசு நாட்டு குடிமக்கள் என கூறுவதற்கு என் நா கூசுகிறது. மக்கள் சக்தி என்பது இந்த நாட்டில் கிடையாது. சமூகம் கட்டமைப்பு என்பது சிறிய அளவில் இருந்தால் மக்களின் பலம் அதிகரிக்கும். சமூக கட்டமைப்பு என்பதே பல கோடி பேரை கொண்ட மொழி, இன, மாநில, தேசியவாத குழுக்களாக, ஒற்றைகால் விரலில் நிற்கும் பயில்வான் போல உள்ளது. பயில்வான் போல ஒரு போக்கு காட்டி நாங்கள்தான் உலகின் மிகப்பெரிய குடியரசு நாடு என்று கூறிக்கொண்டு, நம் பலவீனங்களை சரிசெய்துகொள்ளாமல், வெறும் பொருளாதாரா கணக்கு காட்டி உலகையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றி வருகிறோம்.

விரைவில் அமெரிக்க நிதிநெருக்கடி போல, நமது நெருக்கடிக்குட்டுகளும் வெளிப்படும். இந்திய குடியரசு என்பது கேள்விக்குறியாக்கப்படும். மக்கள் மீண்டும் ஒரு குடியரசை கிராமங்களில் அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஓங்குக மக்களின் அறிவு! தழைக்க மக்களின் நீதி! வாழ்க கிராமிய குடியரசுகள்!


Friday 23 January 2009

இறக்குமதியாகும் வறட்சி




அனைவருக்கும் வணக்கம்,

நீர் என்பது வாழ்விற்கு எவ்வளவு ஆதாரமான விஷயம் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், அத்தகைய நீர் இன்று பல விதங்களில் முக்கியமாக மனிதனின் பேராசைக்காக விரையமாகப்படுகிறது. ஒரு பக்கம் நீராதாரங்களை அழிக்கிறோம். காடுகளை அழித்தல், அளவுக்கு அதிகமாக விவசாய நிலங்களை நீர்பிடிப்பு பகுதிகளில் விரிவு படுத்தல், நிலத்திற்கும், நீர் அளவுக்கும் ஒவ்வாத நீர் தேவை மிகுந்த பயிர்களை பயிர்இடுதல் என பல முறைகளில் நீராதாரங்களை அழிக்கிறோம். அதோடு நில்லாமல் நகரமயமாக்கம் என்ற பெயரில் ஒழுங்கான நிர்வாகம் இல்லாத தன்மையால் நீரிணை விரையம் செய்கிறோம். பல் துலக்கி இரவு உறங்கும் வரை பல வழிகளில் வீட்டிலேயும், அலுவலகங்களிலேயும் மற்ற பிற இடங்களிலும் நீர் விரையமாகிறது. சேமிப்பு என்பது சிறிதும் கிடையாது. நீருக்கும், அதன் உபயோகத்திற்கும் சரியான மதிப்பீடு இல்ல்லாததால் அதன் விலை நமக்கு தெரியவில்லை. நீர் என்பது இயற்கையின் வரப்பிரசாதம் அதற்க்கு யாரும் விலை சொல்ல முடியாது, என்பது போன்ற வாதங்களை கேட்டாகிவிட்டது. நீரென்பது வரபிரசாதமே! ஆனால் அதற்க்குஎன ஒரு விலையுண்டு. “Something will never comes out of nothing“ என்பது போல, நீரென்பது தானாக வந்து விடுவது கிடையாது. இயற்க்கை ஆதாரம் அது. நாம் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. மனிதன் மட்டுமே அதனை உரிமை கொண்டாட முடியாது. நீரிணை தவறாக உபயோகப்படுத்துவது, மனிதனின் சுய நலத்திற்கு மட்டுமேபயன் படுத்துவது, பேராசைக்காக பயன் படுத்துவது போன்றவை, முக்கியமாக மேற்சொன்ன உபயோகங்களுக்கு எந்த வித மதிப்பும் இடாமல் இலவசமாயி பயன் படுத்துவதால் இன்று ஏற்ப்பட்டுள்ள விளைவுகள் ஏராளம்.

இன்று நமக்குள்ளும் (இந்தியாவிற்குள்) உலக அளவிலும் ஏற்ப்பட்டுள்ள உணவு பழக்க வழக்க மாற்றம் நமது நீராதாரங்களை அழிக்கிறது என்று கூறினால் யாரேனும் நம்புவீர்களா? ஆம், ஒரு தலைமுறையில் இந்தியாவில் இருக்கும் அனைவரும் அரிசி, கோதுமை காலாச்சாரத்திர்க்கும், பணப்பயிர் செய்து ஏற்றுமதி என்ற கலாச்சாரத்திற்கும் மாறியதன் விளைவு இன்று இந்தியா முழுவதும் நீர்த்தேவை பன்மடங்கு அதிகரித்து கடுமையான பஞ்சத்தின் பிடியில் இருக்கிறோம்.

உழவன் சூழ்நிலைக்கும் நீரிருப்புக்கும் ஏற்ப உணவு உற்ப்பத்தி செய்து வந்த வேளையில்இந்த பஞ்சம் இருந்ததில்லை. பெரும்வாரியாக மானாவாரியாக பயிர்களை விளைவித்தும், அரு சில இடங்களில் குளம் - கிணறு, ஆறு முதலிய நீராதாரங்களை கொண்டு விளைவதை விளைவித்து உண்டு வந்தோம். மேற்க்கத்திய விவசாயம் புகுந்தவுடன் லாபநோக்கான விவசாயத்தில், உணவு உற்பத்தி பெருக்கம், ஏற்றுமதி, தொழிநுட்பம் என்ற பெயரில் நமது நீராதாரங்களை தவறாக கையாட்டுவிட்டோம். பெரும்பாலானோர் அரிசி உணவிற்கு மாறியதன் விளைவு நீர்த்தேவை அதிகமான அரிசியை எங்கும் பயிரிட ஆரம்பிக்க விளைவு நீர் விரையம். பணத்திற்காக கரும்பினை மானாவாரி நிலங்களில் பயிரிட ஆரம்பித்தோம். இப்படி பல இடங்களில் இயற்க்கைக்கு ஒவ்வாத பல முறைகளை கையாண்டு வருகிறோம். அத்தோடு நில்லாமல் நீர் நிர்வாகத்தை அரசுமயமாக்கி மக்களுக்கு நீரின் முக்கியத்துவம் பற்றி அறியாமல் செய்து விட்டோம். நீரின் அருமையை சமூக நீண்டநாளைய பயன் அடிப்படையில் ஒருவரும் உணரவில்லை. இதன் விளைவு மிக மோசமாக இருக்கும். இன்று பல மேலை நாடுகளில் நீரின் உபயோகத்தை அதன் மதிப்பை சரியாக கணக்கிட்டு பொருளாதார உற்ப்பத்தியில் சேர்க்க முயல்கிறார்கள். அப்படிப்பார்க்கும்போது, நீர்த்தேவை அதிகம் மிகுந்த பயிரினை பெரிய அளவில் ஒரு பகுதியோ, நாடோ உற்பத்தி செய்து பிற பகுதிகளுக்கு முக்கியாக பெருநகரங்களுக்கு அனுப்புமாயின் அந்த நாடோ பகுதியோ வறட்சியை இறக்குமதி செய்வதாக கூறுகிறார்கள். இப்படி இறக்குமதி செய்து மனிதனின் ஆடம்பர தேவைக்கு உற்பத்தி செய்யயப்படும் உணவுகள் இயற்க்கை ஆதாரங்களை அழிப்பதால் இவை ஏற்றுமதி செய்து பெரும் காசைக்காட்டிலும் மிகவும் மோசமான சிதைவை அடைவதாக கூறுகிறார்கள். அந்நாடு வறட்சியை விலைகொடுத்துவாங்குகிறது , அதன் எதிர்காலத்தை இப்போது விற்க தொடங்கி விட்டது என கூறுகிறார்கள் நவீன பொருளாதார நிபுணர்கள். „Virtual water trade“ என்ற முறையில் இத்தனை குறிப்பிடுகிறார்கள். இது பற்றிய குறும்படம் ஒன்று கீழ் இணைக்கப்பட்டுள்ளது.


„For every action there is an equal and opposite reaction“ பருப்பொருள் உலகில் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு வளையம் போல். ஒரு வளையத்தின் ஒரு இடத்தை சூடுபடுத்தினால் எதிர்ப்பகுதிக்கு சூடு பரவுவதுபோல், உலகில் எந்த ஒரு செயலுக்கு எதிர் விளைவு உண்டு. அது உடனேயும் தெரியலாம் பல வருடங்களோ, நூற்றாண்டுகளோ கழித்து தெரியலாம். அது போலவே, இன்று நாம் செய்து வரும் நீர் முறைகேடுகளுக்கு நாளைய பலனை அனுபவிக்க வேண்டும்.

Sunday 11 January 2009

ஏர் கொண்ட உழவனின்றி போர் செய்யும் வீரன் ஏது?


















ஆரோடும்
மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்



ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்
மண்ணிலே தங்கம் உண்டு மணியும் உண்டு வைரம் உண்டு
கண்ணிலே ஆனச்செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் கொண்டு பாசம் கொண்டு பசுமை கொண்டு
பஞ்சமும் நோயுமின்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வமிங்கு செராதோ தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ!



ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்
பச்சை வண்ண சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா!
பச்சை வண்ண சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா!
பருவம் கொண்டு பெண்ணைப்போலே நாணம் என்ன சொல்லம்மா!
அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேண்டும் கேளம்மா!
அறுவடை காலம் உந்தன் திருமண நாலம்மா! திருமண நாலம்மா!

போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்


ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்
கை கட்டி சேவை செய்து
கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லி பிச்சை பெற்றால்
அன்னை பூமி கேலி செய்வாள்



தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவனின்றி போர் செய்யும் வீரன் ஏது? போர் செய்யும் வீரன் ஏது?


போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்.

இது 1964 ஆம் வந்த பழனி என்னும் படத்தில் வரும் பாடல்.