Friday 29 October 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-14

குறையும் பாலுமே கோக்களைப்

பெருக்குவ என்ன

இறையும் எண்ணிலன் இரண்டிலும்

பிற பயன் ஏற்றின்

முறையில் வட்டி வேட்டு அரும் பெறல்

முதலினை இழக்கும்

அறிவிலாளனே அவன் உழும்

தொழிற்கு உளன் ஆகான்.

ஆவினங்களை வளம் பெறச் செய்பவன் புல் குறையும் பாலும் தான் என்று சிறிதும் எண்ணாமல் குறைப் புல்லை தீனிவரிக்கு விடுவது, பாலைக் கறந்து விலை செய்வது ஆகிய வேறு செயல்களில் அவற்றைப் பயன்படுத்துவானே ஆனால் அந்த உழவன் வட்டிக்கு ஆசைப்பட்டு முதலை இழந்து நிற்கும் அறிவற்றவனுக்கு ஒப்பாவான். அவன் உழவுத் தொழிலுக்குத் தகுதி பெற்றவன் ஆகான்.

No comments:

Post a Comment