Friday 10 October 2014

அக்டோபர் பத்தும், மன்னர் கால நீதியும்


மன்னர்கால கல்வெட்டை உதாரணம் காட்டி பேசினால் கம்முனிசவியாதிகளாலும், நவீன ஜனநாயக (!) வியாதிகளாலும், பிற்போக்கு என்றும் கொடுங்கோலன் என்றும் முத்திரை குத்தப்படுவோம். இன்று உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்...நல்லதுக்கு காலமில்லை. பேய் அரசாண்டால் ..பிணம் தின்னும் சாத்திரங்கள்..

லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மரண தண்டனை விதித்த மன்னன்: 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் தகவல்
பென்னேஸ்வர மடம் கோயிலில் உள்ள கல்வெட்டை காட்டுகிறார் வரலாற்று ஆய்வாளர் சுகவன முருகன்.
தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் லஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் மற்றும் அதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிக்கும் மரண தண்டனை வழங்க மன்னன் ஆணை பிறப்பித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது பென் னேஸ்வரமடம் கிராமம். இங்குள்ள பென்னேஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது, பிரசித்திபெற்றது. இந்தக் கோயில் கல்வெட்டில் லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மற்றும் அதை தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கும் மரண தண்டணை விதிக்கும் வகையில் மன்னன் ஆணையிட்ட கல்வெட்டு உள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சுகவன முருகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழு நிலைகளைக் கொண்ட பெரிய ராஜகோபுரம் இருக்கும் கோயில்பென்னேஸ்வர மடம் கோயிலாகும். இது பிற்காலச் சோழர் காலக் கோயிலாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயி லில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. சோழர்கள், போசாளர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சியில் இக்கோயிலுக்கு பலவிதமான கொடைகள், தானங்கள் வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தானமாகப் பெறப் பட்ட நிலங்கள், ஊர்கள் மற்றும் பொது சொத்துகளை சிலர் ஏய்த்துஅனுபவித்துள்ளனர். இதனை அறிந்த பேரரசன் வீர ராமநாதன் ஒரு ஆணையை வெளியிட்டுள்ளார். அந்த ஆணை தொடர்பான கல்வெட்டு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போசாள மன்னன் வீர ராமநாதன் கல்வெட்டு
"ஸ்ரீ வீரராமந்நாத தேவரீஸர்க்கு யாண்டு நாற்பத்தொன்றாவது உடையார் பெண்ணையாண்டார் மடத்தி லும் பெண்ணை நாயனார் தேவதானமான ஊர்களிலும் ஒரு அதிகாரியாதல் கணக்கர் காரியஞ் செய்வார்களாதல் கூசராதல் ஆரேனுமொருவர் வந்து விட்டது விடாமல் சோறு வேண்டுதல் மற்றேதேனும் நலிவுகள் செய் குதல் செய்தாருண்டாகில் தாங்களே அவர்களைத் தலையைஅறுத்துவிடவும் அப்படி செய்திலர் களாதல் தங்கள் தலைகளோடே போமென்னும்படிறெயப்புத்த பண்ணி இதுவே சாதனமாகக் கொண்டு ஆங்கு வந்து நலிந்தவர் களைத் தாங்களே ஆஞ்ஞை பண்ணிக் கொள்ளவும் சீ காரியமாகத்தாங்க . . . த. . . போதும் போன அமுதுபடிக் குடலாக ஸர்வ மானிய மாகக் குடுத்தோம். அனைத் தாயமு விட்டுக்கு . . .கூசர் உள்ளிட் டார் பையூரிலே இருக்கவும் சொன்னோம். இப்படியாதே இதுக்கு விலங்கனம் பன்னினவன் கெங்கைக் கரையில் குராற் பசுவைக் கொன்றான் பாவத்தைக் கொள்வான்" என எழுதப்பட்டுள்ளது.
இதன் விளக்கம், லஞ்சம் வாங்கினால், கொடுத்தால் சிரச்சேதம் செய்ய அதாவது தலையை வெட்டும் படியும் அவ்வாறு நிகழாமல் தடுக்கத் தவறினால் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளின் தலையை வெட்டும்படியும் ஆணை வெளியிட்டுள்ளார். இக்கல்வெட்டு கோயிலின் தெற்கு சுவர் பகுதியில் இருக்கிறது. இக்கல்வெட்டு கிரந்தம் மற்றும் தமிழில் வடிக்கப்பட்டுள்ளது.
லஞ்சமாக உணவு அல்லது சோறு கேட்டால் கூட குற்றம் என்றும் அரசர் சொல்லியிருக்கிறார். மேற் கண்ட பேரரசர் வீரராமநாதனின் கல்வெட்டைக் கொண்டும், தலைபலிக் கற்களின் சிற்ப அமைப்பைக் கொண்டும் இவ்வாறு தண்டிக்கப் பட்டிருக்கக் கூடும் என்பது தெரிகிறது. இது தமிழக வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.

இந்தக் கல்வெட்டை போசாளப் பேரரசன் வீரராமநாதனின் நாற்பத்தி ஒன்றாவது ஆட்சியாண்டில் இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டிருக் கிறது. கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு கி.பி.1295 என குறிப்பிடப் பட்டுள்ளது.

Source : 
http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-700-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article6485964.ece


வேண்டும்... ஆனால் வேண்டாம்...-இன்று உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில், கொடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டங்களை தடை செய்துள்ளன. இதனை அனைத்து நாடுகளும் பின்பற்ற வலியுறுத்தி, அக்.,10ம் தேதி, உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2002 மே.13ல் ரோமில் கூடிய சர்வதேச தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ) கூட்டத்தில், மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2003 அக்.10ல் முதல் முதலாக இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. செய்யாத குற்றம், மொழி புரியாததால் அடைந்த தண்டனை, ஆராயப்படாத நீதி, மூளை வளர்ச்சி இல்லாதவர் செய்த குற்றம், சிறுவயதில் செய்த குற்றம் ஆகியவை காரணமாக, உலகில் ஐந்து பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நீதி இல்லாமல் அநீதியாக 5 பேர் மரண தண்டனை பெற்றனர். இனி இதுபோல் நடக்காமல் இருக்க, மரண தண்டனையை உலக நாடுகள் ரத்து செய்ய வேண்டும் என மரண தண்டனை எதிர்ப்புக் குழுவினர் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்தியாவில் அரிதிலும் அரிதான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை தரப்படுகிறது. இது குறித்து 2 விதமான கருத்துகள் நாட்டில் நிலவுகிறது. மரண தண்டனை விதிப்பதன் மூலம், குற்றங்கள் குறையும் என ஒரு சாராரும், குற்றவாளிகளை கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என எதிர்தரப்பும் வாதிடுகின்றனர். 2012ம் ஆண்டு கணக்கின் படி, இந்தியாவில் 477 மரண தண்டனை கைதிகள் சிறையில் உள்ளனர் என "அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1995 முதல் 2012 வரை 20 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் அதிகளவில் மரண தண்டனை நிறைவேற்றும் நாடுகளின் பட்டியிலில் சீனா, ஈரான், ஈராக், சவுதி ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன.


வேண்டும்... ஆனால் வேண்டாம்...-இன்று உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில், கொடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டங்களை தடை செய்துள்ளன. இதனை அனைத்து நாடுகளும் பின்பற்ற வலியுறுத்தி, அக்.,10ம் தேதி, உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2002 மே.13ல் ரோமில் கூடிய சர்வதேச தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ) கூட்டத்தில், மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2003 அக்.10ல் முதல் முதலாக இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. செய்யாத குற்றம், மொழி புரியாததால் அடைந்த தண்டனை, ஆராயப்படாத நீதி, மூளை வளர்ச்சி இல்லாதவர் செய்த குற்றம், சிறுவயதில் செய்த குற்றம் ஆகியவை காரணமாக, உலகில் ஐந்து பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நீதி இல்லாமல் அநீதியாக 5 பேர் மரண தண்டனை பெற்றனர். இனி இதுபோல் நடக்காமல் இருக்க, மரண தண்டனையை உலக நாடுகள் ரத்து செய்ய வேண்டும் என மரண தண்டனை எதிர்ப்புக் குழுவினர் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்தியாவில் அரிதிலும் அரிதான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை தரப்படுகிறது. இது குறித்து 2 விதமான கருத்துகள் நாட்டில் நிலவுகிறது. மரண தண்டனை விதிப்பதன் மூலம், குற்றங்கள் குறையும் என ஒரு சாராரும், குற்றவாளிகளை கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என எதிர்தரப்பும் வாதிடுகின்றனர். 2012ம் ஆண்டு கணக்கின் படி, இந்தியாவில் 477 மரண தண்டனை கைதிகள் சிறையில் உள்ளனர் என "அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1995 முதல் 2012 வரை 20 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் அதிகளவில் மரண தண்டனை நிறைவேற்றும் நாடுகளின் பட்டியிலில் சீனா, ஈரான், ஈராக், சவுதி ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன. 

2003 அக்.10ல் முதல் முதலாக இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. செய்யாத குற்றம், மொழி புரியாததால் அடைந்த தண்டனை, ஆராயப்படாத நீதி, மூளை வளர்ச்சி இல்லாதவர் செய்த குற்றம், சிறுவயதில் செய்த குற்றம் ஆகியவை காரணமாக, உலகில் ஐந்து பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நீதி இல்லாமல் அநீதியாக 5 பேர் மரண தண்டனை பெற்றனர். இனி இதுபோல் நடக்காமல் இருக்க, மரண தண்டனையை உலக நாடுகள் ரத்து செய்ய வேண்டும் என மரண தண்டனை எதிர்ப்புக் குழுவினர் கோரிக்கை வைக்கின்றனர். 
வேண்டும்... ஆனால் வேண்டாம்...-இன்று உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில், கொடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டங்களை தடை செய்துள்ளன. இதனை அனைத்து நாடுகளும் பின்பற்ற வலியுறுத்தி, அக்.,10ம் தேதி, உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2002 மே.13ல் ரோமில் கூடிய சர்வதேச தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ) கூட்டத்தில், மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் அரிதிலும் அரிதான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை தரப்படுகிறது. இது குறித்து 2 விதமான கருத்துகள் நாட்டில் நிலவுகிறது. மரண தண்டனை விதிப்பதன் மூலம், குற்றங்கள் குறையும் என ஒரு சாராரும், குற்றவாளிகளை கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என எதிர்தரப்பும் வாதிடுகின்றனர். 2012ம் ஆண்டு கணக்கின் படி, இந்தியாவில் 477 மரண தண்டனை கைதிகள் சிறையில் உள்ளனர் என "அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1995 முதல் 2012 வரை 20 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் அதிகளவில் மரண தண்டனை நிறைவேற்றும் நாடுகளின் பட்டியிலில் சீனா, ஈரான், ஈராக், சவுதி ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1088883 



Monday 19 May 2014

சேவல் சண்டைக்கும் தடை வருகிறதா?



ஜல்லிக்கட்டுக்கு தடை: சேவல் சண்டைக்கும் தடை வருகிறது? –Maalaimalar
 அப்ப இந்த கொடுமையை யார்  தடை செய்வார்கள்? 
பதிவு செய்த நாள்திங்கட்கிழமைமே 12, 11:38 AM IST

 சென்னை, மே.12–ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதுபோல சேவல் சண்டை போட்டி நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய மிருக வதை எதிர்ப்பு இயக்கத்தின் இயக்குனர் மணிலால் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:–  சேவல் சண்டை நடத்துவதால் சேவல்கள் காயம் அடைகின்றன. உயிர் இழக்கும் அபாயமும் உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பில் மிருகங்கள் பறவைகள் துன்புறுத்தப் படக் கூடாது. அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் மாநில அரசுகளுக்கு பிறப்பித்த உத்தரவில் மிருகங்கள், பறவைகள் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் சித்ரவதை செய்யப்படுவதை தடுக்கும் கடமை உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதுசேவல் சண்டையில் சேவல்கள் காயப்படுத்தப்படுகின்றன. எனவே மாநில அரசு இதை தடுக்கும் வகையில் சேவல் சண்டைக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எனவே சேவல் சண்டைக்கும் தடை விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


















மிருகவதையை தடைசெய்யாமல் ஜல்லிக்கட்டை தடை செய்வது முட்டாள்தனம் 

ஜல்லிக்கட்டு தடை என்பது நமது பாரம்பரியத்தை அழிக்கும் சதி! 






Thursday 10 April 2014

Indian deltas are sinking

DIVYA GANDHI
Indian deltas are sinking, and no, it is not because of sea level rise. “Humans are sinking deltas four times faster than the sea level is rising,” says American professor of oceanography and geology at the University of Colorado, James Syvitski.
A proliferation of large dams that starve deltas of sediment, groundwater mining that causes land compaction, and artificial levees that affect river courses, have been responsible for the subsiding of major Indian deltas including Ganga-Brahmaputra, Krishna-Godavari, Brahmani and Mahanadi, Prof. Syvitski demonstrated in his lecture ‘The Peril of Deltas on the Indian Subcontinent: Welcome to the Anthropocene,’ at the International Geosphere-Biosphere Programme held here recently. “The Krishna delta is perhaps the worst off because large dams are preventing almost any of the river’s sediments from reaching it,” he later told The Hindu. In a research paper co-authored by Professor Syvitski and published in Nature Goescience in 2009, satellite imagery and on-ground studies established that the Krishna delta has witnessed a 94 per cent reduction in sediment deposition.
The Godavari, Brahmani and Mahanadi deltas have seen a 40 per cent, 50 percent and 74 per cent reduction, respectively, in sediments delivered to them over the last three decades. “Globally, on average, we have built one large dam everyday for 130 years. Hundreds of gigatonnes of sediments are stored in these global reservoirs,” he said.
And India, which started earlier than even the U.S., has seen a particular proliferation of dams post 1950. “A delta typically should have enough sediment to counter ocean energy. But if you stop bringing in sediment, eventually the ocean will win." The Ganga delta, meanwhile, is sinking at 18 mm a year, even as the sea level rises by 3 mm a year along this coast, spelling a tenuous future for the thousands of people who live and work, he said.
Here, groundwater mining has led to a significant compaction and subsidence of land over the last 15 years. He concurs with the concept of ‘Anthropocene,’ a term suggesting that human impact on the environment has been so large post industrial revolution that this era can be counted as an entirely new geological epoch. And the submergence of deltas is indeed a case in point, he said.
Source : THE HINDU - http://www.thehindu.com/sci-tech/energy-and-environment/indian-deltas-are-sinking/article5892566.ece


Nature Geoscience 2, 681 - 686 (2009) 
Published online: 20 September 2009 | doi:10.1038/ngeo629
Subject Category: Geomorphology
Sinking deltas due to human activities
James P. M. Syvitski1, Albert J. Kettner1, Irina Overeem1, Eric W. H. Hutton1, Mark T. Hannon1, G. Robert Brakenridge2, John Day3, Charles Vörösmarty4, Yoshiki Saito5, Liviu Giosan6 & Robert J. Nicholls7
Abstract
Many of the world's largest deltas are densely populated and heavily farmed. Yet many of their inhabitants are becoming increasingly vulnerable to flooding and conversions of their land to open ocean. The vulnerability is a result of sediment compaction from the removal of oil, gas and water from the delta's underlying sediments, the trapping of sediment in reservoirs upstream and floodplain engineering in combination with rising global sea level. Here we present an assessment of 33 deltas chosen to represent the world's deltas. We find that in the past decade, 85% of the deltas experienced severe flooding, resulting in the temporary submergence of 260,000 km2. We conservatively estimate that the delta surface area vulnerable to flooding could increase by 50% under the current projected values for sea-level rise in the twenty-first century. This figure could increase if the capture of sediment upstream persists and continues to prevent the growth and buffering of the deltas.
  1. CSDMS Integration Facility, INSTAAR, University of Colorado, Boulder, Colorado 80309-0545, USA
  2. Dartmouth Flood Observatory, Dartmouth College, Hanover, New Hampshire 03755, USA
  3. Department of Oceanography and Coastal Sciences, Louisiana State University, Baton Rouge, Louisiana 70803, USA
  4. Department of Civil Engineering, City College of New York, City University of New York, New York 10035, USA
  5. Geological Survey of Japan, AIST, Tsukuba 305-8567, Japan
  6. Woods Hole Oceanographic Institution, Woods Hole, Massachusetts 02543, USA
  7. School of Civil Engineering and the Environment and Tyndall Centre for Climate Change Research, University of Southampton, SO17 IBJ, UK.
Correspondence to: James P. M. Syvitski1 e-mail: James.syvitski@colorado.edu

Saturday 1 March 2014

மரபணு மாற்றத்தை ஒழுங்கு படுத்துதல்

மரபணு மாற்றத்தை ஒழுங்கு படுத்துதல்
M. S.சுவாமிநாதன்

கள ஆராய்ச்சி : மரபணு மாற்று (பி.டி.) பருத்தியில் ரூ. 100  கோடி முதலீடு செய்யபட்டிருக்கும். ஆனால், அதிலிருந்து ரூ.50,000  கோடி லாபம் கிடைத்திருக்கும். போட்டோ : எம்.சாய்நாத்


மரபணு மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டு புதிய மரபியல் உருவாகி தற்போது அறுவத்தி ஒரு ஆண்டுகள் ஆகிறது. மரபணு மாற்று பயிர்கள் உருவாக்கப்பட்டு முப்பத்தி ஒரு  ஆண்டுகள் ஆகிறது. மரபணு மாற்று உயிரினத்தைகொண்டு கடலில் உள்ள எண்ணெய் சிதறல்களை சுத்திகரிக்கும் பொருட்டு உருவாக்கிய டாக்டர்.ஆனந்த சக்கரவர்த்தி முதன் முதலில் மரபணு மாற்று உயிரினத்திற்கு காப்புரிமை பெற்றார். மருத்துவம், சுற்றுப்புறம், தொழில் மற்றும் விவசாய துறைகள் மூலக்கூறு மரபியல்சார் அறிவியலின் காரணமாக பயனடைந்துள்ளன. மருத்துவ மரபியல்துறையில் நீதிநெறி சார்ந்த பிரச்சனைகள் மேல் பெருமளவில் அக்கறைகாட்டப்படுகிறது. உதாரணத்திற்கு மனித இனப்பெருக்கவியலில் மரபணு மாற்று தொழிநுட்ப மற்றும் குளோனிங் பயன்பாடு குறித்து சர்ச்சை உள்ளது.  
     ஆனால், வைத்தியத்திற்கு செய்யப்படும் மரபணு மாற்று குளோனிங் முறைகள் வரவேற்கப்படுகின்றன. பெருகிவரும் ஆற்று மற்றும் நிலத்தடி நீர் மாசுபாடுகளை உயிரிவழியில் களைய இத்தொழிநுட்பத்தின் மீது பெருமளவில் ஆர்வம் காட்டப்படுகிறது. உணவு மற்றும் விவசாயத்தில் மட்டுமே சுற்றுசூழல் மாசுபாடு, உயிர்-பாதுகாப்பு, பல்லுயிர் இழப்பு, மனித-கால்நடை ஆரோக்கியம் குறித்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

நன்மை மற்றும் தீமை கலந்திருக்கும் தொழிநுட்பங்களை கொண்டுவரும்போது, அதுபற்றிய ஒழுங்குநெறிமுறை வைத்திருப்பது அவசியமாகும். அதுவே அத்தொழினுட்பங்களை பாரபட்சமில்லாமல் ஆராய உதவும். இது அணு-ஆயுத தொழிநுட்பம் போன்றதே. இதனாலேயே, அரசாங்கம் பயோடெக்னாலஜி ஒழுங்குமுறை நிறுவன சட்டத்தை பார்லிமெண்டில் அறிமுகப்படுத்தியது.
     துரதிஷ்டவசமாக, இந்த சட்டத்தை இயற்ற செல்லுபடியாகும் காலம் பதினைந்தாவது லோக்சபா முடிவடைந்ததும் முடிந்துவிட்டது.  இதனால், இந்திய விவசாய ஆராய்ச்சி சபை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி சபை, மத்திய சுற்றுசூழல் மற்றும் வன அமைச்சகம்  மற்றும் பல துறைகளுடன் இணைந்து இந்த சட்டத்தை மறுஆய்வு செய்து புதிதாக தயாரித்து அடுத்த பாராளுமன்றம் அமையும்போது தாக்கல் செய்ய வேண்டும். அரசியல், பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிக்கைகள் முதலியவை பெருவாரியாக ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு அறிவியல் கழகம் உருவாக்கப்படலாம்.

சர்ச்சைகளை எதிர்நோக்குதல்
               
விவசாய பயோடெக்னாலஜி செயற்குழுவிற்கு 2003 இல்  நான் தலைவராக இருந்த போது  2004  ஒரு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் பார்லிமென்ட்டால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்பு மற்றும் தேசிய அளவில் மரபணு மாற்று உயிரிகளை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வேண்டுமென்று பரிந்துரை செய்திருந்தேன். இத்தொழினுட்ப ஆராய்ச்சி/பயிரிட  தேவையான பயிர்இடைவெளி மற்றும் பூச்சிக்குத் தேவையான புகலிடப்பயிர்களின் அத்தியாவிசயம் போன்ற முன்னெச்சரிக்கைகள் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது பரிந்துரை. இத்தகைய பரிந்துரைகள் சமர்பிக்கப்பட்டு தற்போது பத்தாண்டுகள் ஆகியுள்ள சூழ்நிலையில், இவற்றை நடைமுறைப்படுத்த இனி சிறிதேனும் காலம் தாழ்த்தக்கூடாது.  மரபணு மாற்று உயிரினங்களை எதிர்க்கும் அரசு-சாரா நிறுவனங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க நம்மிடம் மரபணு மாற்று உயிரின திறனாய்வு மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டு  வழிமுறைகள் இருக்க வேண்டும்.
தற்போதுள்ள மரபணு மாற்று பயிர் ஆராய்ச்சி சம்பந்தமான தடையானது தொழினுட்பத்தை முடமாக்குவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களிடம் உள்ள மரபணு மாற்று உயிரினங்ளின் நன்மைகளை பெற தடையாக அமைந்துள்ளது. தற்போது மரபியல் விஞ்ஞானிகளிடம் உள்ள மரபணு மாற்று உயிரினங்கள் பூச்சி, நோய், வறட்சி முதலியவற்றை சமாளிக்கும் திறம்பெற்றவையாகவும், சத்துக்களை மேம்படுத்தும் திறன் கொண்டவையாகவும் உள்ளன. இவையனைத்தும் பொது நலனுக்காக இருக்கும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இவை இளம் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு தற்போது தெளிவில்லாத அரசு முடிவுகளால் அவனம்பிக்கைக்குள்ளாகி உள்ளனர்.
விவசாயம் என்பது மாநிலம் சார்ந்த துறையாகையால் மாநில விவசாய பல்கலைகள், அரசுவிவசாய துறை முதலியவை களஆராய்ச்சி திட்டம் மற்றும் செயல்பாட்டு வழிமுறைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இத்தகைய ஆராய்ச்சிகள் பத்து வருட காலம் பிடிப்பதால், இதனை முடுக்கி விட்டு துரிதப்படுத்தி நம்பகமான கள ஆராய்ச்சி மற்றும் நன்மை-தீமை க்கான கள முடிவுகளை கொண்டு வரவேண்டும்.

அரசு-தனியார் கூட்டுப்பங்களிப்பு
     பயோடெக்னாலஜி ஆராய்ச்சியில் முதலீடிற்கான வருமானம் அதிகம். பி.டி. (மரபணு மாற்று) பருத்தியில் சுமார் ரூ.100 கோடி முதலீடே செய்யப்பட்டு சுமார் ரூ.50,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிக விளைச்சல் மற்றும் நோய் எதிர்ப்புதிறன் கொண்ட ரகங்களை உருவாக்க முற்பட வேண்டும். ஏனென்றால் தனியார் துறையால் வீரிய ஒட்டு ரகங்களை மட்டுமே உருவாக்க முடியும், மேலும் அதனை விவசாயிகள் வருடாவருடம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டு முயற்சியால் விவசாயிகளுக்கு மிகபல நல்ல தொழினுட்பங்களை கொண்டுசேர்க்க முடியும்.
     ஊட்டச்சத்து பாதுகாப்பு, சுத்தமான நதி நீர், சுகாதாரம், அடிப்படை ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து அறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். உணவு பாதுகாப்பு சட்டம் 2013  அனைவருக்கும் உணவு கிடைக்க எவ்வாறு பசிக்கு எதிராக சமூக பாதுகாப்பு அளிக்கிறதோ அது போல் ஊட்டச்சத்து பற்றாக்குறை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
     உணவிலேயே பல ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ள உணவுகளின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். முக்கியமாக முருங்கை, சக்கரை வள்ளி கிழங்கு, நெல்லிக்காய், கறிப்பலா, போன்ற இயற்கையான பல்லூட்ட உணவுபயிர்கள் ஊட்டசத்து தோட்டங்களிலும் விவசாய-காடுகளிலும் பிரபலமாக்கப்பட வேண்டும். மரபியலில் உருவாக்கப்பட்ட இரும்புச்சத்து மிக்க கம்பு வகைகள் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். எனது வேண்டும் கோளின் அடிப்படையில், நிதியமைச்சர் கடந்த ஆண்டுக்கான (2013-14)  நிதிநிலை அறிக்கையில் ரூ.200 கோடியை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊட்டச்சத்து பற்றாக்குறை சுமையை குறைக்க ஊட்டசத்து பண்ணைகளை உருவாக்க ஒதுக்கினார். இந்த ஆண்டு சர்வதேச குடும்ப ஆண்டாகையால் ஒவ்வொரு குடும்பமும் ஊட்டச்சத்து பண்ணைகளை உருவாக்கி ஊட்டச்சத்து பற்றாக்குறைகளை களைய ஒரு திட்டத்தை அமல்படுத்தலாம்.

ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல்

     இந்திய அரசியலில் மரபணு மாற்று பொறியியலுக்கான ஆதரவு தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆராய்ச்சி நிறுவனமும் மரபணு மாற்று ஆராச்சிக்கான திட்ட பரிந்துரை கமிட்டிகளை வைத்திருக்க வேண்டியது அவசியம். அவைகளின் நோக்கம் மரபியலில் மரபணு மாற்று பயிர் ஆராய்ச்சி திட்டங்கள் தேவையா என்பதை பரிந்துரைப்பதாக இருக்க வேண்டும். தீர்க்க முடியாத, வேறு வழியில்லாத பிரச்சனைகள் மட்டுமே மரபணு மாற்று ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
     மரபணு அறிவியல் நெறிமுறைகள், ஆராய்ச்சிகளை விவசாயிகளுக்கு புரியும் வகையில் செயல்முறைகளாக கொண்டுசெல்வதில் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. மரபணுமாற்று உணவு பயிர்களின் சமையல் மற்றும் சுவை சார்ந்த ஆராய்ச்சிகளை மனையியல் கல்லூரிகள் மேற்கொள்ளலாம். இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகமான காணப்படுகிறது. இயற்கை விவசாய சான்றிதழ் நடைமுறைகளும் மார்கர் கொண்டு செய்யப்படும் மரபணு மாற்று மரபியல் ரகங்களை அனுமதிக்கிறது.
     இந்தியாவில் பல மாநிலங்கள் இயற்கை விவசாய மாநிலங்களாக மாறுகின்றன. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் இயற்கை விவசாயத்திற்கான அடிப்படை தேவைகளை விளக்க வேண்டும். பூச்சி, நோய் மற்றும் களை ஆகிய இம்மூன்று முக்கோண காரணிகளின் சவாலை இயற்கை விவசாயத்தில் சமாளிக்க வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும்.
பல்லுயிர் பெருக்கமே பயோடெக்னாலஜி தொழிலின் மூலதனமாகும். அதனை காப்பது மற்றும் நேர்த்தியாக அளவாக உபயோகிப்பது இவ்விஞஞானிகளின் கருத்தாக இருக்க வேண்டும். வேளாண் அறிவியல் நிலையங்கள் மரபணு மாற்று தொழிநுட்பம் சம்பந்தமான அறிவியல்பூர்வமான நம்பகமான பரிந்துரைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். முன்னர் சொன்ன அறிவியல் கழகமானது, ராயல் சொசைட்டி, லண்டன் செயல்படுவது போல், பொதுமக்களுக்கான அறிவியல் புரிதல் மற்றும் அரசியல்வாதிகளுக்கான அறிவியல் புரிதல்  என இருவேறு குழுக்களை உருவாக்கி செயல்பட வேண்டும்.

தகவல்களை பகிர்தல்
     ஊடக தகவல் மையங்கள் ஏற்ப்படுத்தப்பட வேண்டும். கிராம தகவல் மையங்களில் மரபணு மாற்று உயிரிகள் சம்பந்தமாக அறிவியல்பூர்வமான, சரியான தகவல்களை கொண்டு சேர்ப்பதில் பங்காற்ற வேண்டும். அமேரிக்கா போன்ற நாடுகளில் சுற்றுசூழல் பாதுகாப்பு குழு, உணவு மற்றும் சரக்குகள் நிர்வாகக்குழு, விவசாய பயிர் ஆரோக்கிய ஆய்வு குழு ஆகிய மூன்று அமைப்புகள் சேர்ந்து மரபணு மாற்று உயிரிகள் சம்பந்தமான ஆராய்ச்சிகள், விளைவுகள், ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேற்கொள்கின்றன. அதுபோல, நமக்கும் வல்லுனர்களால் நிர்வகிப்படும் அத்தகைய மரபணு மாற்று பயிர் மற்றும் உணவு சார் ஒழுங்குமுறை அமைப்புகள் தேவைப்படுகிறது.
     முற்சொன்னது போல் ஆரம்பிக்கப்படவேண்டிய அறிவியல் கழகமானது தற்போதுள்ள தடையை நீக்கி ஆராய்ச்சிகளை பாதுகாப்பாக செய்வதில் கவனம் செலுத்த முனைய வேண்டும். இவ்வறிவியல் கழகம் தேர்தல் வாக்குறுதிகளில் சிறுவிவசாயிகள் தொடர்பான புதிய தொழினுட்பங்களை  உட்கொணர்ந்து  தேர்தல் அறிக்கைகளை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும்.

(பேராசிரியர். M.S.சுவாமிநாதன், நிறுவன தலைவர் மற்றும் தலைமை அறிவுரையாளர், யுனெஸ்கோ, தலைமை, ஈகோடெக்னாலஜி, M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, சென்னை. )    


Source: 
Translation of "Regulating Genetic modification" published in "THE HINDU"  February 25, 2014 Open-Ed  http://www.thehindu.com/opinion/op-ed/regulating-genetic-modification/article5723031.ece