Thursday 5 February 2009

தாய்மண், தாய்மொழி, மண்ணின் மைந்தன், தமிழர்






"கரிசக்காட்டுமாந்தர்". மண் என்பதை பொறுத்தே மனிதனின் குணங்களும் இருக்கும் என்பது காலங்காலமாக நம்முள் இருக்கும் பேச்சுவழக்குகளில் ஒன்று. மண்ணிலிருந்தே அனைத்து உயிர்களுக்கும் தேவையான உணவு, நீர், பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய தேவைகள் நிறைவு செய்யப்படுகிறது. மண்ணின் தன்மையே அதிலிருந்து உருவாகும் உயிர்களுக்கு இருக்கும். மண் எவ்வாறோ அவ்வாறே மக்களும். மண் மாறினால் அனைத்தும் மாறும் (செடிகொடிகள், விலங்குகள், மனிதர்கள், அவர்தம் பழக்க வழக்கம், நாகரிகம், உணவு முறை, போன்றவை). மண்ணே அனைத்திற்கும் வித்து.

உதாரணம்:

கரிசக்காட்டு மண்ணில் விளையும் பருத்தி(விருதுநகர்) நன்கு செழித்து காணப்படும். செம்மண்ணில் விளையும் பருத்தி(சேலம்) செழிப்பட்ட்று காணப்படும். கரிகாட்டு மண்ணும், செம்மண்ணும் தன்மை மாறுவதால் அதில் விளைந்த பயிருக்கும் தன்மை மாறும். தஞ்சாவூரில் வளரும் வேப்ப மரமும், தர்மபுரியில் வளரும் வேம்பும் அதன் கசப்பில் அதன் வளர்ச்சியில் வேறுபடும். மண்ணின் தன்மையே இதன் வேறுபாட்டை தீர்மானிக்கிறது. Genus, Species, sub-species, varieties என்று taxonomical பாகுபாடும் இங்கனமே மண்ணை கொண்டு அமைகிறது. ஒரே செடிகொடிகளுள் உள்ள வேறுபாடு அதன் மண் ஊட்டி வளர்த்தவாரே வேறுபடுகிறது.

விலங்குகள்: விலங்குகளும் மண்ணை பொறுத்தே மாறுபடும். செம்மண்ணில் காணப்படும் தேள் செக்கசெவேல் என்று இருக்கும். கருமண்ணில் வாழும் தேள் கருமையாக இருக்கும். அந்த மண்ணிலே உயிர் வாழும் தாவர, சிறு விலங்குகளை உண்டு வாழும் உயிரினங்களும் அந்த மண்ணின் தன்மையையே பெரும். ராஜஸ்தானில் காணப்படும் மாடுகளும் (தார்பார்க்கர் இனம்), தமிழ் நாட்டில் காணப்படும் (காங்கேய இனம்) மண்ணின் தன்மைகளால் உருவான செடிகொடி மற்றும் இதர சுற்றுசூழல் மாறுபாடுகளால் வேறு படுகிறது. விலங்கினம் மறுபடவும் அடிப்படை மண்ணே!

௩செடிகொடி, விலங்கு அதனைசார்த்த சுற்றுப்புறம் இவையனைத்தையும் அடிப்படையாக கொண்டு வாழும் மனிதர்களும் மண்ணின் அடிப்படையிலேயே அமைகின்றனர். அவர்களது எண்ணம், உணவு, வாழ்க்கை முறை, வீட்டு அமைப்புகள், கல்வி, தொழில் என அனைத்தும் மண்ணை அடிப்படையாகக்கொண்டு உருவாகிறது. செடிகொடிகள் போல், விலங்குகள் போல், மனிதனும் மண்ணிற்கு மாறுபடுவான். ஒரு மனிதன் style="font-size: 100%;"> (இன்றல்ல) தான் வாழும் நாளில் ஒரு 100 மைல் தோல்விக்கு மேல் செல்லும் பழக்கம் இல்லாமல் தான் இருக்கும் இடத்திலேயே தான் வாழும் நாட்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்று வாழ்ந்தான். பல தலைமுறைகள் அந்த சுழலிலேயே வாழ்த்தமையால் அவன் அந்தமண்ணின் வளம் போலவே குணமும் பெற்று விட்டான். குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் எனும் நிலா பாகுபாட்டு முறை மண்ணை சார்ந்ததே. ஒவ்வொரு பாகுபாட்டு முறையிலும் அனைத்தும் வேறுபடும்.

ஆகவேதான் தாய்மண், மண்ணின் மைந்தன், நிலா மகன்/மகள், மண்ணின் மானம், மண்ணாசை, தாய் நாடு என அனைத்தும் மண்ணை, தாய் மொழி பொறுத்தே அமைந்தது. ஏனென்றால் அவன் வாழ்க்கைக்கு தேவையான உணவு, நீர், அடைக்கலம் என அனைத்தையும் மண்ணே தந்தது. கேல்வரகும், கம்பும், காய்ந்து போன மன்னனின் வெளிப்பாடுகள். அதன் வெளிப்பாடுகளே அதை உண்டு வாழும் மனிதன். அரிசியும், வாழையும் ஈர மண்ணின் வெளிப்பாடுகள் அதன் தன்மை கொண்டதே அங்கு வாழும் மனிதன் மனமும் வாழ்வும். இவர்கள் மண்ணின் மைந்தர்கள். மொழி, இனம், வாழ்வு உணவு, பழக்க வழக்கம், நாகரிகம், அறிவு என அனைத்திலும் மண்ணின் மைந்தர்கள்.தமிழஅர்களும் சரி, இந்தியர்களும் சரி இவ்வளவு வேறுபாடுகளுடன் காணப்படுவதன் காரணம் அவர்தம் மண்ணின் தன்மையே. இந்தியாவில் மண் தன்மை வேறுபாடு மாநிலத்திற்கு மாநிலம், மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடும். இதனை நாம் நன்கு அறிவோம். BIODIVERSITY அதிகம் உள்ள நாடுகளில் இந்த்தியாவும் ஒன்று. இதன் காரணம் மண்ணே. இந்தியாவைப்போல் மனிதருள் வேறுபாடு அதிகம் கொண்ட நாடுகள் மிகச்சில. இத்தகைய வேறுபாடே மொழியிலிருந்து கலாச்சாரம் வரை அனைத்தையும் வேறுபடுத்துகிறது.

இதன் அனைத்திற்கும் அடிப்படை கருவியாக அமைந்தது விவசாயம். ஒரு மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகள் நிலா வளம் குன்றாமல் வாழ வழி கண்டு பிடித்தவர்கள் தெற்காசிய மக்களே! இதனாலேயே நம் மக்கள் ஒரே இடத்தில் (unlike migratory nomads of the western nations and africa) பலாயிரம் ஆண்டுகள் வாழமுடிந்தது. கலாச்சாரமும், வேறுபாடும் அதிகம் கொண்டு வளர்ந்தது. மொழி செழுமை அதிகம் ஆனதன் காரணமும் மண்ணின் அடிப்படைத்தன்மையே அங்கு உணவழிக்கும் வேளாண் குடியினரின் (மண்ணின் மைந்தர்கள்) வாழ்க்கையே.

அதனாலையே மண்ணை அடிப்படையாகக்கொண்ட (உணவு வழங்கும்) விவசாய மக்களை நம்மியே உலகம்/ சமுதாயம் வாழ்கிறது என்பதை கருத்தில் கொடு "சுழன்றும் ஏர்பின்னது உலகம்" என்றார் வள்ளுவர்.ஆனால் இன்றோ இத்தகைய வியசாயமும், மண்ணின் மகத்துவமும் அழிந்து supermarket இலும், கடையிலும், உணவகங்களிலும் உணவு கிடைக்கின்ற கலாச்சாரத்தில், மண்ணின் மைந்தர்கள் என்று கூற எவருமிலர். ஆந்திரா அரிசி, நியூ சிலாந்து ஆப்பிள், பர்மா பருப்பு, தாய்லாந்து மிளகு, அமெரிக்க கோதுமை, ஸ்பானிஷ் தக்காளி என்று பல நாடுகளில் பல மண்ணில் விளைந்த பொருட்களை உண்ணும் தமிழ் நாட்டு மக்கள் மண்ணின் (தமிழ் மண்ணின்) மைந்தர்கள் என்று கூறும் தகுதியை 50% இழந்து விட்டனர். வெறும் மொழி, கலை என்று இருத்தலால் அவர்கள் உண்மை தமிழர்கள் என்று கூற வியலாது. அந்த மண்ணிலேயே பிறந்து அந்த மண்ணில் விளைந்ததை உண்டு அந்த நாட்டுக்காக உண்ணும் நாள் வரும் வரை உண்மைத்தமிழர் எவருமிலர். தமிழ் நாட்டிலும் வாழும் தமிழர்கள் பெண்டு சர்ட்டு அணிந்து, பீசா பகற் போன்றவற்றை உண்டு, கொளுத்தும் வெயிலில் கண்ணாடி வீடுகளிலும், அலுவலகங்களிலும், பல மாடிக்கட்டிடங்களிலும் உண்மையாக மண்ணில் உழைத்து உண்ணும் பழக்கம் மறந்த இன்றைய தமிழர்கள் உண்மைதமிழர்கள், மன்னி மைந்தர்களே அல்ல. மேலும் விவசாயத்தை செய்ய மறந்த/ மறுக்கும் தமிழர்கள், அதம்னைப்பத்தி விவாதிக்க மறுக்கும் தமிழர்கள்,அடிப்படை தன்மை இழந்த தமிழர்கள் மண்ணின் மைந்தர்களே அல்ல. இவர்கள் அனைவரும் பல்வேறு உணவு, கலாச்சாரம், மொழி, குணம், என அனைத்திலும் பதிக்கப்பட்டு வாழும் MUTANT மைந்தர்கள். Hybridized தமிழர்கள். மண்ணின் மகத்துவத்தை, விவசாயத்தை உணவை, அனைத்தையும் மறந்த மானங்கெட்ட தமிழர்கள். வேட்டி அணிவதை, ஏர் பிடிப்பதை, மாடு பிட்ப்பதை, தமிழர் உணவு உண்பதை மறந்த அயோக்கியர்கள். பேருக்கு தமிழர் திருநாலேன்று மொட்டைமாடியில் பொங்கல் வைத்து உண்ணும் ஏமாற்றுக்காரர்கள். மண்ணின் மைந்தர்கள்- உண்மை தமிழர்கள் நாடு திரும்பும் நாள் எப்போது?

மண்ணின் மைந்தர்கள் யார்! விவசாயம் அடிப்படையாகொண்டு வாழும் சிலரே என்பது என் கருத்து. பிறர் பிழைப்பிற்க்காக நகரங்களுக்கு படையெடுத்து சென்று விட்ட நன்றி கெட்ட மைந்தர்களே!

No comments:

Post a Comment