Monday 2 February 2009

கனவுகள் ஆயிரம் ! (Anti-terrestrial dreams of the earth’ pests)



அனைவருக்கும் "நமாஸ்"காரம்,

தமிழ்ல ஒரு பழமொழி உண்டு. "இருப்பதை விடுத்து பறப்பதற்கு ஆசைப்பட்டாற்போல்" ன்னு. அது மாதிரி இவ்வளவு பெரிய உலகத்தில இயற்கையோடு வாழத்தெரியமா இருந்து இங்கு இருக்கிற இயற்க்கை வளங்களை தன் பேராசைக்காக அழித்துகொண்டு இப்போ சந்திரனில் விவசாயம் செய்யுரோம்ன்னு கெளம்பி இருக்காங்க நம்ப அறிவிலிங்க! உலகத்துல எப்படி விவசாயம் செய்யணம், இயற்க்கை வளங்களை எப்படி பாதுகாக்கனம் அப்படின்னு யோசிக்காம, சந்திரன், செவ்வாய், சுக்கிரன்னு கடலக்குடி ஜோசியர் மாதிரி பீலா வுட்டுக்கிட்டு இருக்கானுங்க இந்த பரதேசி பயலுங்க. இவனுகளுக்கு பூமியில வாழத்தகுதியே கிடையாது. இவனுகளுக்கு சந்திரனுக்கு பாஸ்போர்ட் கொடுத்து, அங்கயே கெடந்து சாவுங்கடான்னு தொறத்தனம். இதுக்கு செலவு பண்றது யாரு காசு? பொது மக்கள் காசு. கொல்லைப்பக்கம் குப்பைகூளங்களை அள்ள வசதி செஞ்சு தரமாட்டானுங்க இதுல சந்திரன் வேறு. பரதேசிங்க! இவங்கள எவ்வளவு அசிங்கமா திட்டினாலும் தகும். இதுல மாணவர்களை வேற சந்திரன்ல உணவு ஆராய்ச்சி பத்தி படிக்க ஊக்கபடுத்தராரு! ஒரு பாராட்டு விழா நடுத்துனா, அதுக்காக என்னவேண்ணாலும் பேசுவானுங்க! பரதேசிங்க! இத போடுறதுக்கு ஒரு ஊடகம்! த்தூ....! கீழ பாருங்க இந்த செய்திய!

சந்திரனில் குடியேற முடியுமா?

கோவை : ""சந்திரனில் குடியேற முடியுமா, அங்கு விவசாயம் செய்து உயிர் வாழ முடியுமா என்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன,'' என்று சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரை கூறினார். கோவை, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரைக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில், விஞ்ஞானி அண்ணாதுரை பேசியதாவது: சந்திரனில் நாளை குடியிருப்பு அமைக்கும் போது பிற நாடுகளும் அதில் இணைய வேண்டும்
என்பதற்காகவே, சந்திரயான் பயணத்தில் பிற நாடுகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. "நாசா' அமைப்பு ஏழு ஆண்டுகள் சிரமப்பட்டு சாதித்த ஒரு சாதனையை நாம் நான்கு ஆண்டுகளில் சாதித்துள்ளோம். விண்கலத்தில் இதுவரை எந்த நாடும் எடுத்துச் செல்லாத 11 நவீன சாதனங்களை நாம் இவனுகளுக்கெல்லாம் இந்த, சர்வதேச தொழிநுட்பம் ங்கிற பேருல ஆராய்ச்சி பாராட்டு கிடைத்துள்ளது. சந்திரயான்-1 மூலமாக சந்திரன் குறித்த விசேஷ தகவல்கள் கிடைத்துள்ளன. அமெரிக்கா, ஜப்பானை விட மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவுக்கு கூடுதல் கனிமங்கள் தேவை. சந்திரனில் உள்ள கனிம வளங்களில் ஹீலியத்தை மட்டுமே பூமிக்கு கொண்டு வர முடியும். விண்வெளி ஆய்வில் உணவு மற்றும் மருத்துவத் துறையினரின் பங்களிப்பு முக்கியம் என்பதால், இத்துறையில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்தலாம். இப்போது சந்திரனில் உயிர்கள் இல்லை. எதிர்காலத்தில் சிலரையாவது சந்திரனில் குடியேற்ற முடியுமா, விவசாயம் செய்ய முடியுமா என்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது.

கடந்த 1960, 70ம் ஆண்டுகளில் சந்திரனில் இருந்து கொண்டு வரப்பட்ட விண்கற்களைக் கொண்டு தண்ணீர் வளம் குறித்து ஆய்வு செய்தனர்; அதன் முடிவு இப்போது தான் தெரிய வந்துள்ளது. அதேபோல் இப்போது கிடைத்துள்ள படங்கள், தகவல்களை வைத்து முடிவுக்கு வர சிறிது காலமாகும். இந்தியாவின் 20 கோடி இளைஞர்களும் ஒரே லட்சியப் பாதையில் சென்றால் பல சாதனைகள் புரியலாம். குழுவாக செயல்பட்டால் அனைத்து துறைகளிலும்இந்தியாவை மேம்படுத்த முடியும். தகுதி இருந்தால் பெண்கள் 33 சதவீதஒதுக்கீட்டுக்காக போராடத் தேவை இல்லை. இந்திய இளைஞர்களில் 50 சதவீதத்தினர் பெண்கள் என்பதால் அனைத்து துறைகளிலும் 33 சதவீதத்தை விடஅதிக ஒதுக்கீட்டை பெறலாம். நாளைய இந்தியாவை உயர்த்த நாம் அனைவரும்ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அண்ணாதுரை பேசினார்.

http://dinamalar.com/pothunewsdetail.asp?News_id=10670&cls=&ncat=TN

Dear friends and general public, please never encourage these anti-terrestrial ideas. These people are pests for the humanity on earth.

No comments:

Post a Comment