Wednesday 8 February 2012

கல்தச்சர்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கு ஏற்றுவோம்.

வெயிலின் அருமை நிழலில்தாம் புரியும்.  இது பழமொழி. 

கல்தச்சர்களின் அருமை கரண்டு கட்டில்தான் புரியும். இது புது பொன்மொழி. 




  1. தட்டான் (தச்சர்), 
  2. பொற்கொல்லர், 
  3. கருமான் (இரும்பு கொல்லர்), 
  4. கல்தச்சர்

 போன்ற சமுதாயங்களை விஸ்வகர்மா அல்லது ஆசாரி என்பார்கள். இவர்கள் மயனின் வம்சாவளியாக நமது வரலாறு கூறுகிறது. 

குலத்தொழில் கேடு என்று பிராமண த்வேசத்தால் ராஜாஜியை சில சுயாரிவில்லாத சுயமரியாதைக்காரர்கள் எதிர்த்தார்கள். பூணூல் போட்டவன் என்றும் ஆரிய சதிஎன்றும் உளறி குளிர் காய்ந்த்தார்கள். நவீன அறிவியலின் மூலம் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறினர். 

இன்றோ இந்த நவீன அறிவியலின் தாக்கத்தால் லக்ஷ்மியாக நினைக்கப்பட்டு வந்த அம்மி, செக்கு முதலியவை ஓரங்கட்டப்பட்டு விட்டன. கல்தச்சகளது வாழ்க்கையும் இன்று ஓரன்க்கட்டப்பட்டு விட்டது. கல்தச்சர்களின் வாழ்க்கை கோயில்களாலும், அம்மி வாங்கும் பழக்கம் சம்பிரதாயமாக இருப்பதாலும் காப்பாற்றப்பட்டு வருகிறது. 

இது போலவே பிற ஆசாரியர்களின் கலைகளும் பரிதாபநிலைக்கு உள்ளாகி உள்ளன. குயவர்களின் நிலையும் இதுவே. 

இப்படி பாரம்பரிய கலைகள், அதற்கு வேண்டிய மனத்தின்மை, அறிவு, அதை வைத்திருக்கும் பாரம்பரிய சமுதாயங்கள் முதலியவை காப்பாற்றப்பட வேண்டும். ஜாதி த்வேசத்தால் நாம் அதை இழந்து விடக்கூடாது. கலத்தொழில் கல்லாமல் பாகம் பாடும். அதை செய்ய அதற்கான சூழ்நிலைகளை அரசோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ முயற்சி எடுக்க வேண்டும். 

இன்றைய செய்தி நாளைய உலகமாகலாம். பெட்ரோலும், டீசலும், தொலைதொடர்பும் நிரந்த்தரமல்ல. ஆகையால், இந்த மாயையில் மயங்காமல் இக்கலைகளை ஊக்குவிப்பது நமது கடமையாகும். 

நன்றி: தினமலர் இணையம் 

1 comment: