Thursday 4 November 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-20

மாட்டுக்கு ஆகலா வயிற்றினுக்கு உழைத்திடின் அவற்றின்

பாட்டுகும் ஆகவும் மிகும்பலன் அதில் பகிர்ந்து எடுத்தது

ஆள் தொக்கால் விலை எத்துணை அத்துணை சரியாய்

ஊட்டற்கு ஆவன விலை கொண்டு ஊட்டு உணவு உளவேனும்

மாட்டின் வயிற்றுனுக்கும் உதவாத மிளகாய், புகையிலை முதலிய பணப் பயிர்களின் பொருட்டு அந்த மாடுகள் பாடுபடுவதால் அவைகளின் வேலைகளுக்காகப் பணப் பயிரில் அதிகமாகக் கிடைத்த பொருள்களைப் பங்கு செய்து எத்தனை ஆள்கள் செய்ய வேண்டிய வேலையை இந்த மாடுகள் செய்திருக்கின்றன எனபதை எண்ணி வேறு உணவுப் பயிர்களின் வருமான் மிகுதியில் பருத்தி விதை, பிண்ணாக்கு முதலியன விலைக்கு வாங்கிச் சத்துள்ள அவ்வுணவை அவைகளுக்கு ஊட்டுவாயாக.

No comments:

Post a Comment