Tuesday 2 November 2010

மரபாள புராணம்- ஏர்ப்படலம்-புல்-செய்யுள்-18

ுண்டகம் முதலிய மூடும் புல் குறை

உண்டிலன் உதவிலன் உலுத்தவன் கைப்பொருள்

மிண்டிய புல்லினும் மிகுத்த காலிகள்

திண்திறல் இலாதவன் சென்னிவன் சுமை.

முள் செடி முதலியன மூடியுள்ள புல் குறையானது தானும் உண்ணாது, பிறருக்கும் உதவாத உலொபியின் கைப்பொருள் போல வீணானதாம். நெருங்கி அடர்ந்த புல்களாயினும் அப்புல்லை மேயும் அளவுள்ள கால் நடைகளுக்கு மேல் அதிக கால் நடைகளை மேய விடுவானே ஆனால் அது சுமை சுமக்கும் திறம் இல்லாதவன் தலையில் சுமத்தும் பெருஞ்ச்சுமை போன்று பயனற்றதாம்.

No comments:

Post a Comment